மேலும் செய்திகள்
செப்டம்பர் சம்பளம் இல்லை; 32,500 பேர் அதிர்ச்சி
03-Oct-2024
திருச்சி:திருச்சியில், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் நேற்று கூறியதாவது: தமிழக போலீசார் இதுவரை, எந்த ஒரு தீவிரவாதியையும் கைது செய்யவில்லை, கஞ்சாவை தவிர வேறு எந்த போதைப் பொருளையும் பிடிக்கவில்லை. எல்லா வகையிலும் தோற்றுப் போயுள்ள தி.மு.க.,வை, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் தோற்கடிப்பர்.ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.,வின் மதிப்புமிக்க தலைவர். அவர் பா.ஜ.,வில் இணையும் முன், அதுபற்றி எந்த கருத்தும் கூற முடியாது. அரசின் கஜானாவை காலி செய்து, ஆசிரியர்களுக்கு சம்பளம் போடாத நிலையில் உள்ள தமிழக அரசு, மத்திய அரசின்மீது பழி போடுகிறது. இன்னும் மூன்று மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலைமை உருவாகும். ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்தால் தான், தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பர்.சமூக நீதி வேண்டும் என்றால், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தி.மு.க., என்பது, ஹிந்து விரோத அமைப்புதான். அதன் ஹிந்து விரோத கொள்கைகள் என்றும் மாறாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
03-Oct-2024