உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்

கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்

சென்னை: ''கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் நிருபர்களை சீமான் சந்தித்தார். நிருபர்: உங்களை கூட்டணிக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்?இது குறித்து சீமான் பதில் அளித்து பேசியதாவது: ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். இது இன்றைக்கு, நேற்று அல்ல. நீண்ட காலமாக அழைப்பு விடுப்பார்கள். உங்களுக்கு தெரியும். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். திரும்ப திரும்ப சொல்வதற்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறது. அதையே திரும்ப திரும்ப பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. கூட்டணிக்கு அழைக்கிறாங்க, அதற்கு நன்றி. ஆனால் எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. தேர்தல், கட்சி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு தான் கூட்டணி முக்கியம், நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம். நாங்கள் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். 5வது முறையாக தனித்து ஒரு கட்சி போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியாக தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். 117 பெண்களுக்கும், 117 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன். அடுத்தவர்களை நம்பி பயணத்தை தொடங்கினால் இலக்கை அடைய முடியாது. தனித்து தான் போட்டியிடுவேன். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி நாங்கள். தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., விற்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் அ.தி.மு.க.,வில் மட்டும் ஊழல் இல்லாமலா இருக்கிறது? த.வெ.க., தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
ஏப் 19, 2025 08:07

விஜய் யோட கூட்டு சேர்ந்து ரெண்டு தி.திராவிடக் கழகங்களையும் ஒழிக்கணும்.


மீனவ நண்பன்
ஏப் 18, 2025 19:48

வெற்றி, தோல்வியை தாண்டி பெட்டி ஒன்றே போதும் என்ற மனநிலையில் பெரும்பாலானோர் பிரச்சாரத்துக்கு போகாம களத்தில் இருப்பார்கள்


S.kausalya
ஏப் 18, 2025 19:33

இந்த ஆள் ஏன் இப்படி உளறுகிறார் என தெரியவில்லை. இவரின் உருப்படாத பேச்சால் நன்மை பெற போவது மறுபடியும் இந்த கேடு கேட்ட திமுக ஆட்சி தான் .மக்களை இந்த அராஜக ஆட்சியில் இருந்து விடுவிக்கும் எண்ணமே இவருக்கு இல்லை. தன்னால் முடியாவிட்டாலும் தனித்து நின்றார் என்ற பெருமை பெற வேண்டும் என நினைக்கிறார் போலும் .


Gurusamy Perumalsamy
ஏப் 18, 2025 18:47

மறைமுகமாக உங்கள் தாய் கழகத்திற்கு உதவி செய்வதற்கு தேவையில்லை வீண்...


Sundar R
ஏப் 18, 2025 17:58

சீமான், தனியாக நிற்கப் போவதாகச் சொன்னால், அவர் ஹிந்து ஓட்டுக்களைப் பெரிய அளவில் பிரித்து, திமுகவுக்கு உதவுகிறார் என்றுதான் அர்த்தம். சீமான் ஒவ்வொரு தேர்தலிலும் தனியாக போட்டியிட்டு ஏராளமான ஹிந்துக்களின் ஓட்டுக்களை பிரித்து, திமுகவிற்கு அவர் உதவுவது கண்கூடாக தெரிகிறது. சீமான் தனியாக நின்றால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறி விடும். அது திமுகவை உண்மையாகவே எதிர்க்கும் பாஜக, அதிமுக, தமாக போன்ற கட்சிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எப்பாடுபட்டாவது, சீமான் உள்பட திமுக எதிர்ப்பு கட்சிகள் அத்தனையையும், ஒரே கூட்டணி குடையின் கீழ் கொண்டு வந்தால் தான் 2026-ல் திமுகவை தகனம் செய்ய முடியும். திமுக எதிர்ப்பு கட்சித்தலைவர் ஒருவர் கூட தமிழகத்தில் சீமான் மாதிரி ரோட்டில் தனியாக நடந்து போகக்கூடாது. திமுக எதிர்ப்பு கட்சித்தலைவர்கள் அனைவரும் ஒரே கூட்டணி குடையின் கீழ் தான் நடந்து சென்று 2026 தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் திமுகவை முழுவதுமாக தகனம் செய்து, கூட்டணி ஆட்சியை உறுதியாக அமைக்க முடியும்.


Gurusamy Perumalsamy
ஏப் 18, 2025 18:44

சரியாக சொன்னீர்கள்


Jagan (not a Sangi anymore)
ஏப் 18, 2025 19:00

அப்போ, ஒரு குடை கீழ் ஜெயிச்சால் முதல்வர் பதவி தருவார்களா? எல்லாரும் ஒரு குடை கீழ் என்று சொல்லி மற்றவர் மேல் சவாரி செய்வது ஜோக். பெரிய கட்சிகள் நல்ல ஆட்சி தந்திருந்தால் சிறிய கட்சிகளுக்கு கான தேவை இருந்திருக்காது. நானும் பிஜேபி மாற்று என்று நினைத்திருந்தேன், அவுங்களும் அதிமுகவுக்கு பல்லக்கு தூக்க போயாச்சு. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல, யார் வந்தாலும் லைக் லைக் சேம் சேம்.


Sampath Kumar
ஏப் 18, 2025 17:33

வாயிலில் வடை சூடாதே வெளில நாங்க புலி மாதிரி நடிப்போம் ஆனல் உண்மையில் பிஜேபிக்கு கை கொடுப்போம் ஒரிசா பொய் பொட்டி வாங்கிடுவா போவியா


Chanemougam Ramachandirane
ஏப் 18, 2025 17:32

தனி மரம் தோப்பாகாது முதலில் சட்டசபைக்கு உள்ளே நுழையுங்கள் தங்கள் சின்னத்தில் நிற்பேன் என்று சொல்லுங்கள் அது நியாயம் .அரசியல் என்பதே பல பேருடன் தான் பயணம் .ஒன்று மட்டும் அரசியலில் ஆட்சியில் நடப்பது என்னவென்றால் தவறு செய்தால் கண்டுக்காமல் போவது தான் கூட்டணி தர்மம் என்றாகி விட்டது


சத்யநாராயணன்
ஏப் 18, 2025 17:12

சீமான் அவர்களின் அனைத்து திறமைகளும் பணமாக மாறிக் கொண்டிருக்கிறது இவரால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் நன்மையும் இல்லை மறைமுகமாக இவர் திமுகவை ஜெயிக்க வைக்கவே பாடுபடுகிறார்


Baskaran
ஏப் 18, 2025 17:01

ஏப்ப நீ இப்படியே சொல்லிகிட்டே இருந்தா நீ எப்ப முன்னேறது வரும் எலெக்ஷன்ல கூட்டணி வை பலத்த வச்சு 2031 எலெக்ஷனை தனிச்சையா கண்ட்டல் நல்லது வீணா ஒத்த கல்லுல இருப்பேன் ரெண்டுகால்லுல-னு இருந்த எப்ப ஆட்சிய புடிக்குறது வீரம் முக்கியம் தான் அத விட விவேகம் முக்கியம், மங்குனியாரே "சோமான்"


sundarsvpr
ஏப் 18, 2025 16:55

நேர்மை வேண்டும். விஜய் தன பெயரை ஜோசப் என்று மாற்றிக்கொண்ட பிறகு விஜய் என்று செய்தி தாள்களில் வருவது மக்களை முட்டாளாக கருதுவது. இது சீமானுக்கும் பொருந்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை