மேலும் செய்திகள்
போத்தனுார் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்
10-Nov-2024
விருதுநகர் : திருவனந்தபுரம் -- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் நாளை (நவ. 12) முதல் மூன்று மாதங்கள் இயக்கப்படவுள்ளது.திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இடையே சிறப்பு ரயில் (06083) நாளை முதல் 2025 ஜன. 28 வரை இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் (06084) நவ. 13 முதல் 2025 ஜன. 29 வரை இயக்கப்படவுள்ளது.இந்த ரயில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:55 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் மதியம் 12:45 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு வந்தடையும்.கொல்லம், காயங்குளம், மாவேலிகரா, செங்கனுார், கோட்டையம், எர்ணாகுளம், ஆலுவா, பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலத்தில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
10-Nov-2024