உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது விபத்து அல்ல; திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை காட்டம்

இது விபத்து அல்ல; திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் உயிரிழந்தது விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், அரசுப் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம். பல பள்ளிகள், கட்டடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதல்வரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை. ஏழை, எளிய குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை, திமுக அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததன் விளைவு, இன்று வாழ வேண்டிய ஒரு குழந்தையைப் பறி கொடுத்திருக்கிறோம். இதனை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும். வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகிய இருவருமே இதற்கு முழுப் பொறுப்பு. இனியும், அரசுப் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யாமலிருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

M S RAGHUNATHAN
டிச 16, 2025 19:03

அமைதி மார்க்கத்தினர் ஹஜ் பயணம் போக தங்க விடுதி கட்டப் போகிறார்கள். ஆனால் பள்ளிச்சுவர் ஸ்திரத்தன்மை பற்றி ஆய்வு செய்யாது இந்த அரசு. அந்த விடுதியில் தங்கும் இஸ்லாமியர்கள் நினைவில் கொள்ள வேண்டியது அது இந்துக்களின் வரிப்பணத்தின் மூலம் கட்டப் பட்டது என்று. அங்கு தங்குவது முறையா என்று யோசியுங்கள்.


Ramesh Sargam
டிச 16, 2025 19:03

திமுக ஒழிக...


kjpkh
டிச 16, 2025 19:01

மோஸ்ட் டேஞ்சரஸ் கவர்மெண்ட். படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல கட்டட வசதி இல்லை. என்னத்த சொல்ல.


Anantharaman Srinivasan
டிச 16, 2025 18:57

தன் தலைவர்களுக்கு கட்டும் மணி மண்டபம் அறிவாலயம் சிலைகளில் காட்டும் அக்கறையை சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளி கட்டிடங்களில் காட்ட வேண்டும்.


Yaro Oruvan
டிச 16, 2025 18:36

டாஸ்மாக் மாடல் அரசுக்கு இதெல்லாம் தெரியாது .. லஞ்சம் கொள்ளை ஊழல் மற்றும் ஒட்டு பொறுக்க மட்டுமே தெரியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 16, 2025 18:27

திராவிடனுக்கு திராவிடர்களைக் காலி செய்யும் உரிமை இல்லையா ....... திமுக காட்டம் .....


Ramanujam Veraswamy
டிச 16, 2025 18:18

DMK Govt. has money to build memorials, statues etc in the mermory of Sri M.Karunanidhi. Can spend crores of rupees youth boast their images through publicity media but not for repairing schools. Now, they will shed crocodile tears and promise to repairs all school buildings. Yet another promise with no intention to fulfill.


bharathidhasan
டிச 16, 2025 18:11

தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிற இரண்டு கட்சிகளுமே இதை பற்றிய கவலை இல்லை. திரு அண்ணாமலை கூறுவதுபோல இது விபத்து அல்ல அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை தான்.


Kannan
டிச 16, 2025 21:38

அவ்வ்ளோ அக்கரை இருக்கு. முன்னாடியே நீ போய் பார்த்து சொல்லி இருக்கலாம் ல.


vivek
டிச 17, 2025 07:01

உன் வீட்டு பசங்களுக்கு நடந்தா இந்த மாதிரி கிண்டலா பேசுவியா.. .என்ன செய்யா ..உன் வளர்ப்பு அப்படி


Barakat Ali
டிச 16, 2025 17:57

கருணாநிதிக்கு, அவரது பேனாவுக்கு மக்கள் வரிப்பணத்தில் சிலைகள் எழுப்புவோம் ....... ஆனால் ......


P.M.E.Raj
டிச 16, 2025 17:52

திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைய பள்ளிகளின் நிலை இதுபோன்றுதான் உள்ளது. குறிப்பாக ஊத்துக்கோட்டை தாலுக்கா எல்லாபுரம், மீஞ்சூர், கும்முடிப்பூண்டி, சோழவரம் ஒன்றியங்களில் அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திமுகவின் கையாலாகாத தனத்தினால் இன்னும் எத்தனை பிஞ்சுகளின் உயிர் போகுமோ என்ற அச்சம் உள்ளது. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்த திருவள்ளூர் மாவட்ட மக்களே தயவுசெய்து இனிமேலும் இந்த திமுக வாக்களிக்கவேண்டும். திரும்பவும் திமுகவை வெற்றிபெறச்செய்தாள் தமிழகம் சுடுகாடாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை