உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 25) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

ஆசிரியருக்கு குண்டாஸ்

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த செந்தில்குமார், 50, பள்ளி மாணவியர் பலருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவியரின் வாக்குமூலம் அடிப்படையில், குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழும உறுப்பினர் புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த, 3ம் தேதி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீலகிரி எஸ்.பி., நிஷா பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, குண்டர் தடுப்பு சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

சில்மிஷ செக்யூரிட்டி சிக்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்த, 15 வயது சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதி கார்மென்ட்ஸில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர் முருகேசன். 41. சில தினங்களுக்கு முன், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வெளிப்புற கேட்டை உடைத்து உள்ளே சென்ற முருகேசன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி பெற்றோர் புகாரில், கிருஷ்ணகிரி மகளிர் போலீசார், முருகேசனை கைது செய்தனர்.

தலைமையாசிரியருக்கு கம்பி

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு தலைமையாசிரியர் ரமேஷ் குமார், 57, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ரமேஷ் குமாரை போக்சோ சட்டத்தில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தண்டாயுதபாணி விசாரணை நடத்தி, தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.

பாய்ந்தது குண்டர் சட்டம்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 31; இவர் மீது, ஈரோடு டவுன், வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி, வழிப்பறி உட்பட, 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார்.ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி விசாரித்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் ஏற்றதால், தமிழ்செல்வன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இன்றைய போக்சோ

திருநெல்வேலி மேலப்பாளையம், ஆமின்புரம் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசாரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் படி, ஆசிரியர் ரபீக்,39, என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவர், இந்த பள்ளி தாளாளர் ஹசன் அபுபக்கரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
ஜூலை 26, 2025 17:34

எதுவும் சொல்வதற்கில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 26, 2025 09:01

தலைமையாசிரிரியர் என்பது பொறுப்பான, பெரிய பதவியாச்சே >>>> அதுவும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மாணவமணிகளை உலகினுக்குத் தரும் பெரிய பொறுப்பு .......


Padmasridharan
ஜூலை 26, 2025 08:24

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மட்டும் வேண்டும். கூட வேலை செய்கிற மற்றவர்கள் தவறு செஞ்சா எதிர்த்து கேட்கிற தைரியமில்லா ஆட்கள்தான் நிறைய பேரும். இங்கே கண்டுக்காத சிறு சிறு தவறுகள்தான் அவர்களை பெரிய தவறுகளை செய்ய தூண்டுகிறது. படிக்கிற பிள்ளைகளை மட்டும் கண்டிச்சா போதாது சாமி.


தியாகு
ஜூலை 26, 2025 07:12

போட்டோவில் இருப்பவனை பார்த்தால் கண்டிப்பாக கட்டுமர திருட்டு திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்னு தோணுது. ஏன்னா, அவனுங்க டிசைன் அப்படி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை