உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுக்க ஆடு அறுக்க வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுக்க ஆடு அறுக்க வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில், தடையை மீறி அறுப்பதற்காக ஆட்டுக்குட்டியுடன் வந்த முஸ்லிம்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் முஸ்லிம் ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இவ்விவகாரத்தை திசை திருப்பும் வகையில் 'தர்காவில் வழிபடுவதை தடுப்பதாக' சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடை இல்லை. ஆடு பலியிடும் விவகாரம் குறித்து கோர்ட்டில் தீர்வு காணுமாறு' அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் பிரச்னை நீடித்து வருகிறது. நேற்று சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு பலிகொடுத்து விருந்து நடத்த திரண்டனர். டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ராஜகுரு, தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உணவு மட்டும் எடுத்துச்செல்வதாக கூறினர். ஆனால் அதில் மாமிசம் இருக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.இதனால் முஸ்லிம் அமைப்பினர் ஆட்டுக்குட்டியுடன் மலை மேல் செல்ல ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

புனிதத்தை காக்க பாலாபிேஷகம்

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டியும், மலையின் புனிதத்தை காக்க வேண்டியும் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்கவேலுக்கு பாலாபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், அகில பாரத ஹிந்து மகா சபா சஞ்சீவிகுமார், அமைப்பு செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் வினோத்குமார், செல்வம், மலை பாதுகாப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sambath
ஜன 19, 2025 13:34

நம் மதத்தையும் கலாச்சாரத்தையும் இந்திய நாட்டையும் அழிக்கத் துடிக்கும் வெறி. அவன் சட்டப்படி கல்லால் அடித்து....


Sridhar
ஜன 19, 2025 11:54

இங்க வந்து ஆடு வெட்டி கலாட்டா பண்ணினானுங்கன்னா, அங்க போய் பன்னி வெட்டி கடை போடவேண்டியதுதானே? எதுக்கு போய் ஏன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு? எப்போதும் பன்னிய முன்னால வைங்க, எல்லா பிரச்னையும் தன்னால அடங்கும். வராக சாமிக்கு அவ்வளவு பவர்.


நிக்கோல்தாம்சன்
ஜன 19, 2025 10:35

இந்துக்கள் வம்புக்கு அங்கே பன்றியை பலிகொடுத்தால் என்ன செய்வீங்க வந்தேறிகளே.


Vijay
ஜன 19, 2025 10:28

மூர்க்க நட்பு உடலுக்கும் உயிருக்கும் கேடு.


HoneyBee
ஜன 19, 2025 09:37

இது என்னடா‌ இந்துக்களுக்கு வந்த சோதனை. நாம் வாழ்வது ஒற்றுமை ஒற்றுமை சமாதானம் என்று சொல்லும் தேசத்தில் தானே. வீண் பிடிவாதம் ஏன் முஸ்லிம் மக்களுக்கு. எல்லாம் மாறும்.. அப்போது வீண் வேதனை தான் மிஞ்சும்


அப்பாவி
ஜன 19, 2025 08:42

ஒட்டகம் பலி குடுக்க தடை உண்டா