உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோலார் பம்ப் செட் அமைத்தவர்களுக்கு இலவச விவசாய மின்சாரம் கிடைக்காது

சோலார் பம்ப் செட் அமைத்தவர்களுக்கு இலவச விவசாய மின்சாரம் கிடைக்காது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விவசாய நிலங்களில், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், 'மோட்டார் பம்ப்' அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு தரப்படாது என, மின் வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மின்வாரியமும், அரசும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.எனவே, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.மின் இணைப்பு வழங்க அதிக தாமதம் ஆவதால், சில விவசாயிகள் சொந்த செலவில் தங்களின் நிலத்தில், 'சோலார்' எனப்படும் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்களை அமைத்துள்ளனர்.இந்நிலையில், 'விவசாயிகள் தாங்களாகவே, சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்களை அமைத்திருந்தாலோ அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்களின் மானிய உதவியுடன் அமைத்திருந்தாலோ, விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்' என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, விவசாய கூட்டமைப்பினர் கூறியதாவது: விவசாய மின் இணைப்புக்கு பலரும் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது. மழை பெய்யவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், சூரியசக்தி மின் திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இதன் வாயிலாக, மத்திய அரசின் மானிய உதவியுடன், விவசாய நிலத்தில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றனர். அந்த மின்சாரத்தில், பம்ப் செட்டை இயக்குகின்றனர். சோலார் மோட்டார் பம்ப் செட் அமைத்திருப்பவர்களின், விவசாய மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம்' என்ற மின் வாரியத்தின் புதிய உத்தரவால், இலவச விவசாய மின் இணைப்பு கிடைக்காது. இந்த உத்தரவை, மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

अप्पावी
ஏப் 13, 2025 19:55

இலவச மின்சாரம் குடுத்ததே உதய சூரியன் தானே. ரெண்டு தடவை குடுக்க முடியாது.


Mecca Shivan
ஏப் 13, 2025 17:59

இது சரியான முடிவு.. விவசாயிகள் என்ற போர்வையில் பல பெரும் ஊழல் கொள்ளை பெருச்சாளிகளும் இப்படிப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் .. பெருமபாலான அரசியல்வாதிகள் வருமானம் வருவது விவசாயம் என்று இருக்கும் .. ஊழல் அதிகாரிகளும் இதே வேலை செய்கிறார்கள் ..


Ethiraj
ஏப் 13, 2025 17:09

Free electricity to be monitored .Install HT metering in all agriculture transformerWhich will give how many fake fraud consumer will be there. Waiting list is there last 50 years It will be there next 500 years because ifvfakebfarmers.


sethu
ஏப் 13, 2025 13:52

7 வருடங்களுக்கு முன் நான் சோழர் பம்ப் மத்திய அரசின் உதவியுடன் அமைத்தேன் அதற்க்கு 5 5 வருடத்திற்கு முன்இலவச மின்மோட்டாருக்கு பதிவை கான்செல் செய்தபின்தான் சோழர் மோட்டார் கொடுத்தார்கள். தமிழகத்தில் எந்த திட்டமும் உடனடி பலன் கிடைக்காமல் செய்வதில் தமிழக அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது கேடுகெட்டவர்கள் திராவிட கும்பல் .


Loganathan Kuttuva
ஏப் 13, 2025 13:34

பகலில் சூர்ய ஒளி கிடைக்கும் சமயத்தில் மின் மோட்டார் பம்ப் இயங்கும் . இரவில் இயங்காது .


ديفيد رافائيل
ஏப் 13, 2025 16:43

இரவில் யாருமே விவசாயம் பண்ண மாட்டாங்க


m.arunachalam
ஏப் 13, 2025 13:15

புதியதாக சூரிய மின் மோட்டார் சொந்த செலவில் நிர்மாணித்தால் புதியதாக மின் இணைப்பு இல்லை என்று சொல்வது போல் செய்தியின் தகவல் உள்ளது . சரியா?


Subash BV
ஏப் 13, 2025 12:13

Solar power may not be available for 365 days.They need a standby. INSTEAD MOTIVATE THEM TO BE PATRIOTS.


ஆரூர் ரங்
ஏப் 13, 2025 12:04

விவசாயம் என்பது பசுமைத் தொழில். அதற்கு அளிக்கப்படும் ஊக்கம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவும். சிறு, நடுத்தர விவசாயிகளின் 200 அடி ஆழத்திற்கு உட்பட்ட போர், கிணறுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்க வேண்டும். பருவமழை அவ்வப்போது நீண்ட இடைவெளி விட்டு பெய்யும் காலத்தில் இலவச மின்சாரம் அவசியமே. சூரியஒளி மின்சக்தியை முழுவதும் நம்பியிருக்க முடியாது. பருவத்தில் குளங்கள் வாய்க்கால்களில் தூர்வாரினால் எந்த விவசாயியும் இலவச மின்சாரம் கேட்கப் போவதில்லை.


Srinivasan Krishnamoorthi
ஏப் 13, 2025 11:51

சோலார் நீரேற்றும் கருவிகள் மின் வாரிய திட்ட நிதியிலிருந்தும் மத்திய நிதியிலிருந்தும் மானியமாக பகிர்ந்தளிக்க படுகின்றன. எனவே மின் அளவை உபகாரணத்துக்கு வேலை இல்லை. ஆதலால் இலவச மின் பகிர்மானம் அர்த்தமற்ற பேச்சு. திணைமாலை, கிடையாது என செய்தி போட்டு மக்கள் கவனத்தை திமுக பாணியில் வெளியிடுவது அழகல்ல


lana
ஏப் 13, 2025 10:21

இப்போது புரிகிறதா மத்திய அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களுக்கு பலன் கிடைக்கும். இதை மாநில அரசு கூடுதலாக மானியம் கொடுத்தால் எல்லா சிறு விவசாயிகள் solar அமைத்தால் அரசுக்கு மின் செலவு குறையும். ஒரு முறை செலவு சுமார் 20 ஆண்டு பலன். விவசாயம் இல்லாத காலத்தில் அரசுக்கு மின்சாரம் கிடைக்கும். ஆனால் கமிஷன் கிடையாது. எனவே இதை அரசு ஏற்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை