திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 5 மாதங்களில் ரூ.18,238 கோடி; நாட்டின் ஏற்றுமதியில் 61 சதவீதம்
திருப்பூர்: நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், திருப்பூரில் இருந்து, 18,238 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.இந்தியாவின் பின்னலாடை தொழிலின் தலைநகராக விளங்குகிறது திருப்பூர். நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 61 சதவீதம் திருப்பூரில் நடக்கிறது. கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 65,178 கோடி ரூபாயாகவும், அதில், திருப்பூரின் ஏற்றுமதி, 39,618 கோடி ரூபாயாகவும் இருந்தது. முந்தைய ஆண்டில் 55,798 கோடி ரூபாயாகவும், திருப்பூரின் ஏற்றுமதி, 33,045 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரை, ஐந்து மாதங்களில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 29,899 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.