உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய்

உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய்

ராமநாதபுரம்: உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற பெண் துறவி ஷிப்ரா பதக், 38, உடன் வந்த சகோதரர், கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.பரமக்குடி பகுதியில் அவர் வந்த போது, சிலர் ஸ்ரீராமருக்கு எதிராக கோஷமிட்டு, ராமர் படக்கொடியை கிழித்து, சகோதரர் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக ஷிப்ரா பதக் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், டி.எஸ்.பி., நிரேஸ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஷிப்ரா பதக் அளித்த புகாரில் உண்மை இல்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர்.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ