உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்

ஊட்டி: பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் நான்காவது ஆண்டாக இன்று (ஏப்ரல் 25) ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள மாநில பல்கலை துணைவேந்தர்கள் 21 பேர், தனியார் பல்கலை துணைவேந்தர் 25 பேர், மத்திய பல்கலை துணைவேந்தர் மூவர் என 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 32 பேர் பங்கேற்றனர். 17 பேர் பங்கேற்கவில்லை.எனினும் தமிழக அரசு பல்கலைகளின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்காத பல்கலைகளின் பட்டியல்:1. அண்ணா பல்கலை 2. அண்ணாமலை பல்கலை3. பாரதியார் பல்கலை4. பாரதிதாசன் பல்கலை5. மதுரை காமராஜர் பல்கலை6. மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம்7. அன்னை தெரேசா பல்கலை8. டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவர் பல்கலைக்கழகம்9. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.10. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.11. தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம்12. தமிழ் பல்கலைக்கழகம்13. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்14. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்15. தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம்16. தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்17. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

RAMESH
ஏப் 25, 2025 22:05

அரசியல் செய்யும் து.வே...க்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்....இனி பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு தரும் நிதியை நிறுத்துமா???????


venugopal s
ஏப் 25, 2025 17:18

வேந்தர் தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக இந்த மாநாட்டை கூட்டினாராம்.வேந்தர் முதலில் தம்முடைய தரத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் நல்லது!


Keshavan.J
ஏப் 25, 2025 17:50

வேணுகோபால் வேணுகோபால இருக்கணும் L கோபால இருக்க கூடாது.


B MAADHAVAN
ஏப் 25, 2025 16:47

பல்கலைக்கழக மானியக் குழு அளித்திடும் உதவிகளை பெற்றுக் கொண்டு , சம்பளம் வாங்கும் பொறுப்பற்ற துணை வேந்தர்கள் ஆட்சி செய்பவர்களின் அதிகாரங்களுக்கு பயந்த வெட்கங்கெட்ட கோழைகள் என்று எல்லோரும் பேசுகின்றனர். பெருமைப் படட்டும்.


M R Radha
ஏப் 25, 2025 16:45

தமிழக துணைவேந்தர்கள் தங்களுடைய பதவி பெயரை தட்டுஏந்தர்கள் என்று மாற்றிக் கொள்ளலாம். காசுக்கும் பதவிக்கும் பரிதவிக்கும் ஏந்தர்கள். கேவலப் பிறவிகள்


Velan Iyengaar
ஏப் 25, 2025 16:13

இந்த பத்திரிகையின் நெலம தான் பரிதாபம் ... இது போன்ற செய்திகளை தவிர்க்கவும் முடியாது .


vivek
ஏப் 25, 2025 18:39

இதுல கருத்து போடுற உங்க நிலைமை அதைவிட கேவலம்...கடைசி வரை உனக்கு அலுமினிய தட்டு தான் வேலன்...


தத்வமசி
ஏப் 25, 2025 15:57

திமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் செய்து தமிழக கவர்னரையும், துணை ஜனாதிபதியையும் அவமதித்த இவர்களை ஒன்று இந்த துணை வேந்தர்களை அகற்ற வேண்டும், இல்லை யுஜிசியில் இருந்து வரும் பணத்தை நிறுத்த வேண்டும்.


sureshpramanathan
ஏப் 25, 2025 15:06

Hon Governor should fire whoever not attended the meeting All DMK VCs are corrupt and need immediate removal


EVR Periyaar
ஏப் 25, 2025 15:06

ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு முதல்வர் தான் வேந்தர் என்று அரசாணை வெளிவந்த பிறகும் கூட, இந்த ஆளுநர் தான் வரம்பு மீறி செயல்பட்டு துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டினார். அரசு பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணித்தது சரியான செயல்.


Dharmavaan
ஏப் 25, 2025 15:21

கோர்ட் வரம்பு மீறியிருக்கிறது பதிலடி வரும்


Matt P
ஏப் 25, 2025 15:42

அப்படி ஒன்றும் வரம்பு மீறி கூட்டமுடியாது? கூட்டவும் மாட்டார்.


HoneyBee
ஏப் 25, 2025 14:59

யுஜிசி .. நடவடிக்கைகள் எடுக்கட்டும் பின்னர் உதவி தொகையை நிறுத்தி வைக்கட்டும். அதற்கு பின்னர் தமிழக மாணவர்கள் விழித்து கொள்ளுங்கள்


உண்மை கசக்கும்
ஏப் 25, 2025 14:22

திருடர் தலைவர் டி ஆர் பாலு மீடியாவில் விடுத்த மிரட்டல், ஆளுநர் சொன்ன மாதிரி காவல்துறை மிரட்டலில் பயந்து ... இவனுங்க எல்லாம் துணைவேந்தர்.


V Venkatachalam
ஏப் 25, 2025 16:32

உயிர் பயம் இருக்கும் தானே.‌ஏற்கனவே லஞ்சம் கொடுத்து வாங்கின பதவி.‌உயிர் போயிட்டா போட்ட பணத்தை எடுக்க முடியாது ன்னு அவனவன்களுக்கு தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை