உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராமங்களில் குற்றங்கள் தடுக்க வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி

கிராமங்களில் குற்றங்கள் தடுக்க வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி

சென்னை:தமிழகத்தில், தற்போது கிராமங்களிலும் செயின் பறிப்புகள் நடக்கின்றன; போதைப்பொருட்கள் புழக்கமும் அதிகரிக்கத்து உள்ளது.சில மாதங்களுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே இரவு நேரத்தில், பஸ்சுக்கு காத்திருந்த பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்த, மாநிலம் முழுதும், 12,500க்கும் மேற்பட்ட, 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி' என்ற கண்காணிப்புக் குழுக்களை, போலீசார் அமைத்து உள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கிராமங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி நிர்வாகிகள் என, 25 பேரை இணைத்து, மாநிலம் முழுதும், 12,500க்கும் மேற்பட்ட, 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி'கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க உதவி செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sankar Ramu
ஏப் 03, 2025 00:15

அவங்கதான்டா பிரச்சனையே.


visu
ஏப் 02, 2025 11:33

இப்படி தானே காவலர்களின் நண்பர்கள் குழு என்று உருவாக்கி சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்களுக்கு பின்னர் அதை தடை செய்தனர் இப்ப திரும்ப வேறு பெயரில் ஆரம்பிக்கிறார்களா இதற்க்கு ஊர்க்கார்கள் மட்டும் போதுமே காவலர் தொடர்பு இருந்தாலே பிரச்சினைதான்


முக்கிய வீடியோ