உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை, 5.62 கோடி பேருக்கு,தேர்தல் கமிஷன் வினியோகம் செய்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்கான படிவத்தை, வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5.62 கோடி வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது, 87.6 சதவீதமாகும். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஞ்சியுள்ள வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
நவ 15, 2025 17:01

பழினிச்சாமி சுணக்கம் என்று சொல்லி இருக்கிறார்.


Iyer
நவ 15, 2025 07:01

தமிழ்நாட்டில் வேலைசெய்துகொண்டிருக்கும் வடக்கிந்தியர்கள் பெயர்களை - தமிழ்நாடு வோட்டர்லிஸ்ட்டில் சேர்க்கவேண்டும்.


Kasimani Baskaran
நவ 15, 2025 06:03

சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை சரியாக பூர்த்தி செய்ய சொல்லிக்கொடுக்கலாம். ஞாயாமான வாக்காளர்கள் பட்டியலுக்கு வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை