உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

''கூட்டணி அமைப்பதற்காக, எந்த கட்சியும் எங்களை நோக்கி வரும் என, அ.தி.மு.க., ஒருநாளும் காத்திருக்கவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி; நோட்டாவோடு போட்டி போடும் கட்சி என விமர்சித்தவர்கள், இன்று கூட்டணிக்காக தவம் கிடக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது' என, அ.தி.மு.க.,வை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, இப்படி பதிலளித்துள்ளார் பழனிசாமி.கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., இணைந்து போட்டியிட்டது. தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; அ.தி.மு.க., எதிர்க்கட்சியானது. இதையடுத்து, அக்கட்சிக்குள் இருவிதமான கருத்துகள் பரவின. 'பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலை சந்தித்ததாலேயே, சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. 'அதுவே தோல்விக்கான பிரதான காரணம்' என ஒரு தரப்பும், 'அப்படியெல்லாம் இல்லை; பத்தாண்டு காலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சி நீடித்ததால், மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதனாலேயே, அ.தி.மு.க., கூட்டணி தோல்வியை தழுவியது' என, மற்றொரு தரப்பும் கூறின.

ரகசிய கருத்துக்கணிப்பு

இதையடுத்து, தமிழகம் முழுதும் கட்சி தொண்டர்கள் கருத்தை அறிய முயன்ற பழனிசாமி, தனியார் ஏஜன்சி வாயிலாக ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்பின், 'சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததாலேயே கட்சியும், கூட்டணியும் தோல்வியை தழுவின' என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார். அதற்கேற்ப, கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலரும், பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க, பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. அடுத்து வந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அல்லாத வலுவான கூட்டணியை கட்டமைக்க முயன்ற பழனிசாமியின் எண்ணம் ஈடேறவில்லை. தே.மு.தி.க.,வை மட்டும் வைத்துக் கொண்டு, தேர்தலை எதிர்கொண்டார் பழனிசாமி. அந்த தேர்தலிலும் கட்சிக்கு பலத்த அடி விழுந்ததும், நிலைகுலைந்து போனார். ஆனாலும், 'பா.ஜ.,வுடன் ஒட்டோ, உறவோ எக்காலத்திலும் கிடையாது' என்று தொடர்ந்து பேசி வந்தார். அதனால், தோல்வியை தவிர்க்க, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களை, அ.தி.மு.க., புறக்கணித்தது.

நிரூபித்தது

இந்நிலையில், பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, லோக்சபா தேர்தலில் களமிறங்கிய பா.ஜ., 18.5 சதவீத ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் தன் சக்தியை நிரூபித்தது. அதற்குப்பின், மீண்டும் பா.ஜ.,வோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் தான், அ.தி.மு.க.,வுக்கு இனி எதிர்காலம் என்ற கருத்து, அ.தி.மு.க.,வினரிடம் ஆழமாக வேர் விட்டது.பழனிசாமியை சுற்றி இருக்கிற மூத்த நிர்வாகிகளும், இந்தக் கருத்துக்கு உடன்பட்டதும், பழனிசாமி ஸ்ருதி குறைந்து, பா.ஜ., கூட்டணியே வேண்டாம் என்ற வாதத்தை தவிர்த்தார். 'ஆறு மாத காலத்துக்குப் பின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்' என்று கூறத் துவங்கினார். பா.ஜ.,வோடு கூட்டணி அமைக்கும் தன் எண்ணத்தை மறைமுகமாக, பழனிசாமி இப்படி தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. அதற்கு தான் அண்ணாமலை அப்படி பதில் சொல்லியிருந்தார். 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி; நோட்டாவோடு போட்டி போடும் கட்சி என விமர்சித்தவர்கள், இன்று பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது' என்றார்.

பதிலடி

இதற்கு, ''கட்சி துவங்கிய காலத்தில் இருந்து, கூட்டணிக்காக தவம் கிடந்த வரலாறு, அ.தி.மு.க.,வுக்கு இல்லை,'' என, பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று உலக மகளிர் தின விழா நடந்தது. அதில் பங்கேற்ற பின், பழனிசாமி அளித்த பேட்டி:பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கின்றனர் என, அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அண்ணாமலை சொல்லவில்லை; தவறாகப் பேசாதீர்கள். தேவையின்றி அவதுாறு பரப்ப வேண்டாம். போட்டு வாங்க வேண்டாம். கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்குப் பின் பேசப்படும் என, ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன்.அ.தி.மு.க., பலமிக்க கட்சி. 1972ல் கட்சி துவங்கியதில் இருந்து இன்றுவரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்தது இல்லை; அந்த வரலாறே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த பழனிசாமி, இப்போது, ''அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை,'' என்று கூறி சமாளித்தாலும், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடப்பது போன்று, பொதுவெளியில் அண்ணாமலை பேசியதில் கடும் எரிச்சலில் உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தற்போதுள்ள அரசியல் சூழலில், தி.மு.க.,வை தோற்கடித்தால் தான், அ.தி.மு.க., என்ற கட்சியே நிலைக்க முடியும். அதற்கு வலுவான கூட்டணி தேவை. தி.மு.க., கூட்டணியில் இருந்து, எந்தக் கட்சியும் வர தயாராக இல்லை. விஜயின் த.வெ.க.,வும் தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறது. எனவே, பா.ஜ., - பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை அ.தி.மு.க.,வுக்கு உள்ளது. அதனால், பா.ஜ.,வுடன் மோதல் போக்கை தவிர்க்கும் வகையில், பழனி சாமி கருத்து தெரிவித்து உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Velan Iyengaar
மார் 09, 2025 19:06

அதிமுக நிர்வாகிகள் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டு வெட்கமின்றி ஒரு தலைப்பு செய்தி ஒன்றிய ஏவல் துறைகளை கொண்டு கைகளை முறுக்கி கூட்டணிக்குள் இழுப்பது கேடுகெட்ட உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி வெட்கமின்றி பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குது அதுவும் இன்னொருத்தன் முந்திக்குள் புகுந்துகொண்டு ....


s.sivarajan
மார் 09, 2025 16:01

2026 வருடம் பிறந்ததும் வாய்சவடால்கள் எல்லாம் குறைந்துவிடும், தேவையான பக்குவம் வந்துவிடும்.


Subburamu Krishnasamy
மார் 09, 2025 15:29

Looters Are strong in Tamizhagam. They will not so easily to loose power. Tamizhagam voters ignorance is exploited by self styled political outfits, caste religious groups and foreign religious groups , antinationals, antihindus.


pmsamy
மார் 09, 2025 15:29

அண்ணாமலை தேவையா உனக்கு நீயே உன் தலையில மண்ண அள்ளி போட்டுகிட்ட ஏற்கனவே கருப்பு நீ பாக்குறதுக்கு பிராடு மாதிரி இருப்ப


Murugesan
மார் 09, 2025 17:33

திராவிட கட்சி தான் பிராடு ஊரைக்கொள்ளையடித்து வாழுகின்ற திமுக அதிமுக அயோக்கியனுங்க


Kasimani Baskaran
மார் 09, 2025 14:50

ஒரே ஒரு இலையை வைத்துக்கொண்டு ஜெயித்து விடலாம் என்பது கனவே. இணைந்தால் வாய்ப்பு உண்டு. அதிக அளவில் PhD வைத்திருக்கும் கட்சியுடன் இணக்கமாக ஒப்பந்தம் போட்டிருப்பதால் இணைப்பு சாத்தியமில்லை. அந்தக்காட்சி சுக்கு நூறாக உடையும் பட்சத்தில் களம் மாறலாம்.


sridhar
மார் 09, 2025 11:57

திமுக காதில் தேன் .


Haja Kuthubdeen
மார் 09, 2025 14:48

அண்ணாமலை வேலையே எடப்பாடிய கடுப்பேத்தி கூட்டணி அமையாம பார்த்துக்க வேண்டியது...இதற்கு தீவிர சங்கிகள் ஆதரவு வேற....


Oviya Vijay
மார் 09, 2025 11:48

பிஜேபியுடன் அதிமுக கூட்டணி சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்குள் இருக்கும் வார்த்தை மோதல்கள் இனி எந்நாளும் அவர்களுக்குள் ஒரு ஒருமித்த கருத்துடன் பயணிக்க முடியாது என்பதனால் தான்... அதையும் தாண்டி கூட்டணி வைக்க வேண்டுமென முயற்சி முன்னெடுக்க நேருமானால் அதிமுக பிஜேபியின் தேசியத் தலைமையிடம் போடப்போகும் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் மாநிலத் தலைமையை மாற்றுங்கள் என்பதாகத் தான் இருக்கும்... கோமாளி மாநிலத் தலைவனின் அடிப் பொடிகள் கோமாளியை மாற்றி விட்டால் எங்கள் ஓட்டுக்கள் பிஜேபிக்கு கிடையாது என்று ஏற்கனவே கூறிக்கொண்டுள்ளனர்... ஆக எப்படிப் பாத்தாலும் இவர்களுக்கள் ஏலாம் பொருத்தம் தான்... என்றைக்கும் ஏழரை தான்... ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு பஞ்சாயத்தையும் தாண்டி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டும் ஜெயிக்கவா போகிறார்கள்... இல்லையே என்பது தான் சிறு குழந்தையும் சொல்லக்கூடிய பதிலாக இருக்கும்... என்ன செய்வது??? மக்களின் நம்பிக்கை வட்டத்திற்குள் இருந்து என்றைக்கோ அதிமுக வை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்... இனி இவர்கள் கரை சேர்வது கடினம்... கூட்டணி அமைந்தாலும் 2026 தேர்தலில் தோல்வி கிடைக்கும் போது பேசாமல் கூட்டணி இல்லாமலேயே போட்டியிட்டு தோற்று போயிருக்கலாம் என்ற நினைப்பே இரு கட்சிகளுக்குள்ளும் மெலோங்கும்... தேர்தல் முடிவுக்கு பின் பிஜேபி அதிமுக இடையேயான வார்த்தை மோதல்கள் கடுமையாக இருக்கப் போகிறது... இவையாவும் இவர்களுக்குள் கூட்டணி அமைந்தால் தான்... ஆனால் மீண்டும் சொல்கிறேன்... இந்த இரு கட்சிகளுக்குள் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...


கணேசன்,வெள்ளியங்குன்றம்
மார் 09, 2025 13:23

ஓவியா நீ உன் கிறிஸ்தவ மத தலைவன் அணில் ஜோசப் விஜய்க்கு சொம்படிப்பதுடன் நிறுத்திக் கொள் பாஜகவை பற்றியெல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். மதமாறிய அங்கி கும்பல்களுக்கு எங்கே அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்து விடுமோ என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது அதன் விளைவுதான் இது போன்ற தத்து பித்து கருத்து...


Nagendran,Erode
மார் 09, 2025 14:51

உனக்கு என்னப்பா நீ தலைவனின் தவெக தவக்களை என்ன வேணாலும் பேசலாம் ஆனா கேட்கட்தான் நாதியில்லை.


Haja Kuthubdeen
மார் 09, 2025 14:52

பிஜெபி திமுகவை எதிர்த்து போராடாமல் அஇஅதிமுகவையே பிடித்து தொங்கி கொண்டு கிடக்கு...அஇஅதிமுகவிற்கு பாஜக தயவு தேவையில்லை..


Velan Iyengaar, Sydney
மார் 09, 2025 19:22

ஓவியம் விஜய் 200 ரூவா வுக்கு பீ கே ஆரியன் தயவில் வந்த கட்சிக்கு முட்டு குடுப்பாரு


தேவராஜன்
மார் 09, 2025 11:39

அதிமுகவும் பாஜகவும் வரும் தேர்தலில் சேர்த்து போட்டி இடவில்லை என்றால் இத்தேர்தல் தான் எடப்பாடியாரின் கடைசித் தேர்தலாக இருக்கும். அத்துடன் அதிமுக அழிந்து போகும்.


Haja Kuthubdeen
மார் 09, 2025 14:57

புரட்சிதலைவர்..அம்மாவின் கட்சி இது..எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது..மத்த கட்சிகாரன் ஓட்டையெல்லாம் சேர்த்து கணக்கு கூட்டி (குறிப்பா பாமக)நாங்க வளர்ந்துட்டோம்னு பீத்திக்கிற கட்சியல்ல அஇஅதிமுக..எத்தனையோ தோல்வியயும் வெற்றியையும் பார்த்தாச்சு...வரும் தேர்தலில் எடப்பாடிதான் முதல்வர்.


sridhar
மார் 09, 2025 11:03

இரண்டு தரப்பிலும் maturity lacking. இப்படியா தினமும் ஒருவரை ஒருவர் சாடுவது .


gprias
மார் 09, 2025 09:49

In 2021 Assembly election ADMK faced election with BJP


சமீபத்திய செய்தி