உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்தணும்

 நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்தணும்

காவிரியை பாதுகாக்கும் நோக்கில், 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில், 2019ம் ஆண்டு முன்னெடுத்தோம். இதற்காக, 11,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரதமரை நேரில் சந்தித்து, நானே வலியுறுத்தினேன். ஆனால், தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.தங்களை துாய சக்தி என கூறிக் கொள்ளும் த.வெ.க., அரசு, வாய்ச் சவடால் அடிப்பது, 'ரீல்ஸ்' வெளியிடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளை கைவிட்டு, தி.மு.க., அரசு முடக்கி வைத்த, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை, மத்திய அரசின் துணையோடு உடனடியாக தொடங்க வேண்டும். - பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
ஜூலை 17, 2026 10:32

கலர் கலரா பெயரிட்டு திட்டங்களை - சிங்கார சென்னை, நடந்தாய் காவேரி, தாலிக்கு தங்கம், நாம் முதல்வன் , தாய்மாமன் பரிசு - அறிவித்து விளம்பரங்கள் தேடாமல் , உண்மையாக மக்களுக்கு சேவை செய்யுங்கள், செயல் படுத்துங்கள் பேச்சுக்களை விட செயலையே மக்கள் விரும்புகிறார்கள். .


Kadaparai Mani
ஜூலை 17, 2026 08:44

Best idea by former CM EPS. Government should follow this idea.


சமீபத்திய செய்தி