மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
54 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 11
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
1 hour(s) ago
திருப்பூர் : பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., பொதுக்கூட்டம் தொடர்பாக திருப்பூரில் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுமக்களிடம் பா.ஜ.,வினர் நோட்டீஸ் வினியோகித்தனர். 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகத்துடன் மெகா பலுான் பறக்கவிடப்பட்டது.திருப்பூரில் நடைபெற உள்ள 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு, பிரதமர் மோடி வருகை குறித்து பா.ஜ., வினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். பல்லடத்தில் இதன் நிறைவு விழாவையொட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் பா.ஜ., வினர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில், 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கினர்.நேற்று மாலை குமரன் கல்லுாரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி, மாநாடு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி அழைத்தனர். மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியளவில் ராட்சத பலுான் ஒன்றை பறக்க விட்டுள்ளனர். அதில், 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
54 minutes ago
1 hour(s) ago | 11
1 hour(s) ago