உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் வங்கக்கடலிலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதனால், இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வரும் 25ம் தேதி, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.பின், 26 முதல் 28ம் தேதி வரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, ராமநாதபுரம் மற்றும் திருச்செந்துாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளில் 5; ராமேஸ்வரத்தில் 4; பாம்பனில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் குறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்., 1 முதல் நவம்பர், 22 வரை, இயல்பாக 311.9 செ.மீ மழை பெய்யும். இந்த ஆண்டு 326.8 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உட்பட, 18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ponssasi
நவ 23, 2024 12:42

மழை பெய்தால் ஐயோ மக்கள் கடும் அவதினு கதறவேண்டியது. மழை மட்டும் இல்லையெனில் மண்ணில் வாழவே முடியாது என்பது உண்மை, மக்கள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ தெரியவில்லை. யானை வழித்தடம் அபகரிக்கப்பட்டது போல மழை நீர்வழி தடமும் இருந்தஇடம் தெரியாமல் போனது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை