உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் களை கட்டியது தீபாவளி!

தமிழகம் முழுவதும் களை கட்டியது தீபாவளி!

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்பு, பட்டாசு, ஜவுளி விற்பனை அமோகமாக நடந்தது.நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து சிறுவர், சிறுமியர் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதை வீதிக்கு வீதி காண முடிகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.பண்டிகையை கொண்டாட, சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து ரயில்களில் மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார், 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.சென்னையில் இருந்து அரசு, ஆம்னி பஸ்கள், ரயில்கள் மூலம் நேற்று ஒரே நாளில், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதேபோல, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.சென்னையில், 18 ஆயிரம் போலீசார் உட்பட மாநிலம் முழுவதும், 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sridhar
அக் 31, 2024 21:23

அந்நிய மத கைக்கூலிகள் மூலையில் முடங்கி வயிர்த்தெறியட்டும் , நாம் நல்ல கொண்டாடுவோம். நரகாசுரன் ஆட்சி ஒழிக .


ஆரூர் ரங்
அக் 31, 2024 10:57

அனைத்து வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 09:44

முதல்வர் வாழ்த்துக்கள் சொல்லாததால் யாரும் அவருக்கு வாக்காளிக்காமல் இருக்கவும் போவதில்லை. அவர் வாழ்த்துக்கள் சொன்னதும் நீங்களும் அவர் கட்சியில் சேரப் போவதும் இல்லை. நான் சொல்வது சரி தானே?? அப்புறம் என்ன வாழ்த்துக்கள்??


sridhar
அக் 31, 2024 20:47

50% சரி. அவர் வாழ்த்து சொன்னாலும் தேவை இல்லை.


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 09:42

ஏன் சார், ஒருத்தர் வாழ்த்துக்கள் சொல்லலைன்னா பண்டிகை கொண்டாட மாட்டீங்களா? எங்க பாஸ் கூட யாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லல. ஐயோ வாழ்த்துக்கள் சொல்லல ன்னு கம்பெனி ஊழியர்கள் சொல்லிக்கிட்டா இருக்கோம். அவர் சொல்ல மாட்டார், அது அவர் இஷ்டம். அவ்ளோ தான்.


சிவராஜ்
அக் 31, 2024 08:38

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.


ديفيد رافائيل
அக் 31, 2024 08:27

Government morning time ல 6am-7am பட்டாசு வெடிக்க சொல்லியிருக்காங்க but Coimbatore location ல after 7am பட்டாசு sound கேட்குது.


Ganapathy
நவ 01, 2024 01:33

அதுக்கு இன்னா இப்போ? நீ கூடதான் கண்ட இடத்துல கண்டகண்ட நேரத்துல குர்பானி ஆடு ஒட்டகம் வெட்டுற. அதொட கதறல் சத்தம் உனக்கு கேக்கலை?


karutthu kandhasamy
அக் 31, 2024 08:15

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மனமில்லாதவர் .ஓணத்திற்கு மறக்காமல் வாழ்த்து சொல்லுவார் தெலுங்கு, கன்னட மக்களுக்கு வாழ்த்து சொல்லுவார் இந்தியா முழுவதும் கொண்டாடும்தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டார் தமிழகம் தவிர அணைத்து மாநில மக்களுக்கு அந்த அந்த மா நில தலைவர்கள் அம்மக்களுக்கு வாழ்த்து சொல்லுவார்கள் இதில் தமிழ்நாடு மட்டும் சாபக்கேடு


கண்ணன்,மேலூர்
அக் 31, 2024 09:54

அந்த துண்டுச் சீட்டு தத்திகளோட தீபாவளி வாழ்த்தை யார் கேட்டது?


ஆரூர் ரங்
அக் 31, 2024 11:00

குள்ளமான அவதாரம் வாமனர். ஓணம் பண்டிகை நாயகர். நன்கு வளர்ந்த சிறப்பான அவதாரம் கிருஷ்ணரின் பண்டிகை தீபாவளி. அவரவர் வளர்ச்சிக்கேற்ற அவதார பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். டெவலப்மென்ட் டெவலப்மென்ட் டெவலப்மென்ட்.


sundarsvpr
அக் 31, 2024 08:12

தமிழக அரசின் ஊழியர் தலைமை அமைச்சர் மு .க ஸ்டாலின் துணை தலைமை அமைச்சர் உதயநிதி தனிப்பட்ட முறையில் ஹிந்து மதம் மட்டும் ஆகாது. ஆனால் கட்சியின் இதர தலைவர்கள் தொண்டர்கள் ஹிந்து விரோதம் இல்லாதவர்கள் என்பதால் தீவாளி ஆரிய பண்டிகை என்றாலும் மக்கள் பண்டிகை என்பதால் என்ன செய்வது ஆட்சியை தொடர வேண்டும் என்ற காரணத்தால் அரசு இந்த பண்டிகையை ஏற்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை