உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; பூஜை பொருள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; பூஜை பொருள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!

எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. ரூ. 50 முதல் 500 வரை சிலைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.தமிழகம் முழுவதும் முந்தைய நாளே எப்போதுமே விநாயகர் சதுர்த்தி களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். விநாயகர் குடைகளில் நிறைய புதுமைகள் இடம் பெற்றிருந்தன. முதியவர்கள் பலர் மாவிலை எருக்கம்பூ ஒலைத்தோரணம் போன்றவைகளை விற்பனை செய்து நாங்கள் இப்போதும் உழைத்துதான் சாப்பிடுகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=10saxzp7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0களிமண் பிள்ளையார் என்றாலும் அதையும் களையாக்கமுடியும் என்று தங்கள் கைவண்ணத்தை காணபித்து களிமண் பிள்ளையார்களை அழகுபடுத்தியிருந்தனர். குழந்தைகள் பலரும் பெற்றோர்களுக்கு ஆதரவாக குடை விற்பது தோரணம் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டனர், எது வேலை ஏறினாலும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர் ஆனால் இந்த எருக்கம் பூ மாலை விலையை மட்டும் பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று அதனை விற்றவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். பூஜைக்கு தேவையான பழங்கள் பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் காம்போ ஆபரில் சில இடங்களில் விற்று வருகின்றனர். விதம் விதமாய் காட்சியளித்த விநாயகர் எல்லாவற்றையும் புன்னகை பூக்க பார்த்துக் கொண்டு இருந்தார். கடைகள் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.கோயில்கள் தொடர்பான முழு தகவல்கள் படிக்க தினமலர் சிறப்பு பக்கத்தை பார்க்கலாம்.https://temple.dinamalar.com/

புதுச்சேரியில்

புதுச்சேரி தினமலர் அலுவலகத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வித்யா கணபதி கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.சிங்கம்புணரி;

ரூ. 50 முதல் 500 வரை

சிலைகளுசிங்கம்புணரியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. நாடு முழுவதும் ஆக. 27 ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அரை அடி முதல் ஒரு அடி வரை பல்வேறு வடிவம் வண்ணங்களில் வீடுகளில் செய்யப்பட்ட சிலைகள் நகரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ரூ. 50 முதல் 500 வரை சிலைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 27, 2025 07:24

ஈர வெங்காயம் எவ்ளோ முயற்சி செய்து விட்டு விட்டது. சனாதன ஒழிப்பு = டெங்கு கொசு. இன்னும் 2000 வருசம் ஆனாலும் ஊ ஃபீஸ் கதறல் அருமை


Kulandai kannan
ஆக 26, 2025 19:21

பல தரப்பினருக்கும் வருமானம் பெருக உதவுவதில் இந்து மதப் பண்டிகை களுக்கு ஈடு இணையில்லை.


ரங்ஸ்
ஆக 26, 2025 13:31

அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:32

இது தான் பெரியார் மண், கடவுளை தொழுவார்கள் அனால் வோட்டு DMK க்கு வோட்டு போடுவார்கள் அவர்கள் க்கு தெரியும் கடவுளை வணங்குவது வேறு அதை வெச்சி பிரிவினை வாதம் பேசி மதத்தை வெச்சி பிரிச்சி பிழைப்பு நடத்தும் கூட்டம் தான் அடக்கி வாசிக்கனும் , அய்யப்பன் ஊரில் கூட பிஜேபி ஆல் வெற்றி பெற முடியவில்லை ,மயிலாப்பூர் ஸ்ரீரங்கம் இப்படி கோயில் ஸ்தலம் உள்ள இடம் எல்லாம் DMK தானே வெற்றி பெற்றது


Shankar
ஆக 26, 2025 12:09

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை