உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயர்; அரசின் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயர்; அரசின் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளிகளின் நுழைவாயிலில் ஜாதி பெயர் இருப்பது தொடர்பாக, தமிழக அரசின் நிலை என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: * ஜாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக் கொடுத்துவிட்டு, பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயரை எழுதலாமா? * ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.* ஜாதியை நிலை நிறுத்தும் நோக்கில் ஜாதி பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? இது தொடர்பாக சங்கம் தொடங்குவது சரியா? * சங்க பதிவு சட்டங்களின்படி ஜாதியின் பெயரில் சங்கங்கள் துவங்க முடியுமா? * இதுபோன்ற ஜாதி சங்கங்கள் சார்பில் பள்ளி கல்லூரிகள் என கல்வி நிலையங்களும் இயங்குகின்றன.* பள்ளிகளின் நுழைவாயிலில் ஜாதி பெயர் இருப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன?* இது குறித்து தமிழக அரசின் நிலை குறித்து பிப்ரவரி 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

பல்லவி
பிப் 16, 2025 12:40

கடவுள் பெயர் கொண்ட ஒரு முதலாளி மகள் தகப்பன் பெயரில் சாதி இருக்கு அது ஒன்றும் செய்ய இயலாது என்பது போல ஒரு கேள்விக்கு பதில் சொல்லிய ஞாபகம் இருக்கு


kulandai kannan
பிப் 16, 2025 11:02

ஜெயின் கல்லூரியின் பெயரில் உள்ள மதத்தை நீக்கச் சொன்னால் இவரைப் பாராட்டலாம்.


jayvee
பிப் 16, 2025 09:44

பள்ளிகளில் மாணவர்களின் ஜாதியை கேட்பது ஜாதி செர்டிபிகாடே கேட்பது SC st obc என்று தனியாக ஹாஸ்டல் பள்ளி கட்டுவது ..வேலையில் ஜாதிக்கு முன்னுரிமை அதைவிட கேவலம் பதவி உயர்விலும் ஜாதி ..இதெல்லாம் ஓகேவா கணம் அவர்களே


KSB
பிப் 16, 2025 07:12

அது சரி.


Bhaskaran
பிப் 15, 2025 22:54

ஐம்பது அறுபது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன் பல சாதி யை சார்ந்த பெரிய செல்வந்தர்கள் முழுக்க முழுக்க தங்கள் செலவில் பள்ளி கட்டி கொடுத்தார்கள் வர்கள் பெயரில் பள்ளி இருப் பதில் நீதியரசர்களுக்கு என்ன பிரச்னை .மேலும் திமுகவின் அன்பழகன் கல்வி அமைச்சராக iruntha காலத்தில் அதிக நன்கொடை tharum அவர்களின் பெயர்கள் அந்த பள்ளிக்கு வைக்கப்படும் என்று அறிவித்தார் .இப்போது அந்த பெயரை எடுத்தால் அந்த சாதி யை சார்ந்தவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டும் .கோவில்பட்டியில் விஸ்வகர்ம mel nilai பள்ளிக்கு தியாகராஜன் பாகவதர் பணம் வாங்காமல் கச்சேரிசெய்து பள்ளி நடக்க உதவினார் இதுபோல் palar உம தங்கள் பகுதியில் ஏழை மாணவர் படிக்க பள்ளி ஆரம்பிக்க உதவியுள்ளார்கல்


c.mohanraj raj
பிப் 15, 2025 22:52

ஒரே வருமானம் உள்ள இரண்டு ஜாதிக்காரர்களில் ஒருவருக்கு மட்டும் லட்சக்கணக்கில் உதவித்தொகை ஒருத்தருக்கு ஒன்றுமே இல்லை என்றால் கொடுப்பவன் மேல் வருத்தம் வருவதை விட வாங்குபவன் மேல் தான் வண்ணம் அதிகமாகும் இதை அரசாங்கமே செய்கிறது


Kuppan
பிப் 15, 2025 22:14

முதலில் அட்மிஷன் நேரத்தில் ஜாதி பெயர் கேட்பதை நிறுத்துங்கள். அடுத்து இடஒதுக்கீடு தேவைப்படாது. ஜாதியும் ஒழியும்.


adalarasan
பிப் 15, 2025 22:07

கோர்ட் கேள்வியை வரவேற்கிறோம் அதே சமயம், மடத்தின் பெயரால், கல்லூரிக்கு,, ஸ்பெஷல் கோடா எதற்கு, பள்ளியில் சேர்க்கும் பொது, காஸ்ட்,enna, என்பது, எல்லாவற்றையும், கோர்ட் கேள்வி கேட்குமா?enna சட்டம் idhu?


Dharmavaan
பிப் 15, 2025 21:44

மதத்தின் பெயரால் முஸ்லீம் லீக் கட்சி துவங்கமுடியுமா .தவறில்லையா என்ன கேவலமான சட்டம் இது.


M S RAGHUNATHAN
பிப் 15, 2025 21:31

லஞ்ச வழக்குகளில் கைது செய்யப் படுபவர்களின் ஜாதியை வெளி இடவேண்டும்.


c.mohanraj raj
பிப் 15, 2025 22:53

கட்டாயம் வெளியிட வேண்டும்


புதிய வீடியோ