உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானியங்கி பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்?

தானியங்கி பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாகனங்களுக்கான தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைப்பதில், பிற மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது.வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும் தகுதிச்சான்று வழங்க, தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கும் திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன.எப்.சி., வழங்குவதில் முறைகேடுகளை தடுக்கும் விதமாகவும், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.'தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 46 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்' என, 2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; ஆனாலும், அந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை.இதுகுறித்து, சாலை பாதுகாப்பு ஆர்வலர்தேவதாஸ் காந்தி கூறியதாவது:பிற மாநிலங்களில், தானியங்கி பரிசோதனை மையங்கள் வாயிலாக தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வாகனங்களின், 'டயர், பிரேக் சிஸ்டம்' மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், 13 அம்சங்களில் ஆய்வு செய்து, 15 நிமிடங்களில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.டில்லியில் அதிகளவில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், தலா ஐந்துக்கும் மேற்பட்ட தானியங்கி பரிசோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன.தமிழகத்தில் இன்னும், ஒரு தானியங்கி பரிசோதனை மையம் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சாலை விபத்துகளை குறைக்க, தானியங்கி பரிசோதனை மையங்கள் அமைக்கும் திட்டத்தை, தமிழக போக்குவரத்து துறை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'முதற்கட்டமாக மதுரையில், ஒரு தானியங்கி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மற்ற இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 05, 2025 06:08

அப்பறம் வசூல் பாதிக்குமே.


Kasimani Baskaran
செப் 05, 2025 05:47

மோசடிகளை தவிர்த்தால் திராவிட ஈக்கோ சிஸ்டம் தனது வாக்குவங்கிகளை இழக்கும். ஆகவே மோசடி செய்ய வசதியாக ஒரு நடைமுறை தொடர்ந்து இருக்கும். தமிழகத்துக்கு வாகன தகுதிச்சான்றிதழ் தேவையில்லை என்று கூட மசோதா நிறைவேற்ற முடியும்.


Mani . V
செப் 05, 2025 05:46

வரும். என்ன அவசரம்? தேர்தல் அறிவிப்புக்கு சில வாரம் முன்பு இதை திறந்து வைத்தால் சோத்துக்கு, காசுக்கு சோரம் போகும் பிண்டங்கள் எங்களுக்கே ஓட்டுப் போட்டு மீண்டும் கொள்ளையடிக்க உதவி செய்வீர்கள் அல்லவா?


Gajageswari
செப் 05, 2025 05:20

பேருந்துகளில் கதவுகள் இல்லை என்று சான்றிதழ் நிராகரிக்கப்படும் லஞ்சம் வாங்குவதற்கு வழி இல்லை


raja
செப் 05, 2025 05:12

"முறைகேடுகளை தடுக்கும் விதமாகவும்" இது எங்கள் புறங்கை நக்கும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்துக்கு பிடிக்காதே... அதான் தாமதம்...


Varadarajan Nagarajan
செப் 05, 2025 03:10

இடைத்தரகர்களையும் லஞ்சத்தையும் ஒழிக்கும் இதுபோன்ற நல்ல திட்டங்கள் மாடல் அரசில் நிறுவப்படாது. ஏனெனில் அது உண்மையில் மிகவும் பயனுள்ள திட்டம். சாலைபாதுகாப்பை உறுதிசெய்து விபத்துகளை குறைக்கும்.


உ.பி
செப் 05, 2025 02:27

அப்பறம் லஞ்சம் வாங்க முடியாதுல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை