உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 14) முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் ஜாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xf1iaakc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தைப் பின்பற்றுவதால் ஜாதியை ஆதரிப்பதாகாது. ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள ''ன்'' விகுதியை மாற்றி ''ர்'' விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள பாலத்தை ஜிடி என்று மட்டுமே பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜிடி நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

R.MURALIKRISHNAN
அக் 14, 2025 19:24

ஆக, தமிழ்நாட்டிற்கு உருப்படியா ஒன்னும் கேக்கல.


Vasan
அக் 14, 2025 17:57

திரு.திருமாவளவன் அவர்கள், வழக்கறிஞர் ஒருவருக்கு, அவர் கட்சியினரால் நடந்த சம்பவத்துக்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பது நல்லதென்று நினைக்கிறேன்.


G Sundaresan
அக் 14, 2025 17:31

இன்றளவும் சொல்லாமல் திடீரென சொல்வது ஏன்? ஆனால் அரசின் இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையிலேயே இன்றும் நீடிக்கிறது. ஏன் இந்த முரன்பாடு? தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன் உரிமை தரப்படுகிறது. சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் நல்லது.


Rajah
அக் 14, 2025 17:02

விஜய்யால் தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசித்திருப்பார்கள். இதில் கடுமையான பாதிப்பு திருமாவுக்குத்தான். எதையும் சொதப்பல் இல்லாமல் செய்யுங்கள்.


அயோக்கிய திருட்டு திராவிடன்.
அக் 14, 2025 16:40

இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் எழுததற்கெல்லாமோ போய் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கேடுகெட்ட அயோக்கியர்கள்.


Shunmugham Selavali
அக் 14, 2025 16:33

முதல்வரின் இரும்புக்கரம் திருமா போன்ற அராஜக அரசியல் வியாதிகளால் துருப்பிடித்து தூள் தூளாகி காணாமல் போய்விட்டது. அப்படி இல்லை என்று யாராவது வாதிட்டால், வழக்கறிஞர் தாக்குதலில் தொடர்புடைய திருமாவின் ரவுடிகளை ஏன் கைது செய்யவில்லை. திமுக சொல்வது ஒன்று செய்வது வேறு, காரணம் ஒட்டு முக்கியம்.


theruvasagan
அக் 14, 2025 16:09

ஜாதிப் பெயர்கள் கூடாதாம். ஆனால் ஜாதிப் பெயர்களில் அரசியல் கட்சி நடத்தலாமாம். தி.திராவிடன்களுடைய புது உருட்டு.


Sivaram
அக் 14, 2025 15:58

உழைக்காமல் சொத்து , பிறகு அதிகாரம் ,கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சேர்த்து கொண்டே போவது , அப்பா உதவி பண்ணுங்கள் நானும் என்னுடைய சோம்பேறி கும்பலும் என்றும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்போம் தினசரி அறிக்கைகள் மூலமாக


ப.சாமி
அக் 14, 2025 15:44

பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களில் ஜாதி பெயர் நீக்கம் செய்ய முயற்சி செய்யுங்கள்


PATTALI
அக் 14, 2025 15:41

போன வாரம்தான் G T நாயுடு பெயரை கோவையில் ஒரு மேம்பாலத்திற்கு வைத்தார். அந்த நாயுடு என்பது என்ன?. இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தமிழகத்தின் சாபக்கேடு. தமிழக மக்கள் அதிபுத்திசாலிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை