உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?: அன்புமணி ஆவேசம்

திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?: அன்புமணி ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்? என பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.பா.ம.க சார்பில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் சிதம்பரத்தில் இன்று(ஜன.,02) நடந்தது. இதில் பா.ம.க தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: 2,000 ஆண்டுகளாக, ஜாதியை வைத்துதான் அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மட்டும் ஏன் மறுக்கிறார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மீது அக்கறை உள்ளதா?

இதற்கிடையே எக்ஸ் சமூகவலைதளத்தில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.5.60 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?. அரசுக்கு தமிழ் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா?. தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டம் தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜன 03, 2024 07:30

ஜாதி கணக்கெடுப்பினால் யாருக்கு என்ன பயன்? வொவொரு ஜாதியில் உள்ளவர்களுக்கா அல்லது 'ஜாதியை' வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளுக்கா?


panneer selvam
ஜன 03, 2024 00:00

It is pretty sad even young leader like Anbumani also take outdated subject like e ( just live on a e for their survival ) , education in Tamil ( just leave it parents who know what is better for their children ) etc instead of focusing on welfare of people , infrastructure development , employment generation for the growth of Tamilnadu . It is unfortunate that we have similar leaders like Udaiyanithi and hence how Tamilnadu could compete with other states for growth . Every major industries and Companies do not even look at Tamilnadu nowadays


K.Ramakrishnan
ஜன 02, 2024 23:30

சாதியைத் தவிர வேறு பேச்சே பேச மாட்டேங்கிறாரு. இவரைப் போய் கூட்டணியில் சேர்த்து இருக்கிற ஓட்டுகளையும் தி.மு.க. அணி இழந்து விடக்கூடாது. இவர்களை கூட்டணியில் சேர்ப்பது பூனையை மடியில் கட்டிய கதை தான்....


Suppan
ஜன 02, 2024 21:13

கருணாநிதியால் மாற்றுப்பெயர் சூட்டப்பட்ட இசைவேளாளர் சாதி மக்கள் மிகக்குறைவு. ஒரு சதவீதம் கூட இல்லை.அதுதான் காரணம்


rama adhavan
ஜன 02, 2024 20:39

இவரே மக்களிடம் ஒரு பொது கருத்து கணிப்பு நடத்தி முடிவை சொல்லட்டுமே?


Kanakala Subbudu
ஜன 02, 2024 18:54

கூட்டணி பேச்சு முறிஞ்சி போச்சோ


Bala
ஜன 02, 2024 18:48

முதல்வருடன் அப்பா சந்திப்பு குதிரலையோ? அரசை விமர்சனம் செய்கிறாரே ஜுனியர் ..


தமிழ்
ஜன 02, 2024 18:14

ஏன் இந்த திடீர் ஆவேசம்.ஒருவேளை திமுக கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?


vadivelu
ஜன 02, 2024 16:33

சாதியை ஒழிக்கணும் என்று சொல்லும் இவர்கள் என சாதி வரி கணக்கை கேட்கிறார்கள்.


Rajarajan
ஜன 02, 2024 16:20

சின்ன ஐயா திரு. அன்புமணி அவர்களே, தங்களது வாரிசுகள் படித்த தமிழ்வழி கல்வி நிலையத்தின் பெயர்களை கூற முடியுமா ?? உங்கள் வருங்கால பேரன் பேத்திகள் படிக்க போகும், தமிழ்வழி கல்வி நிலையத்தின் பெயரையும் கூற முடியுமா ?? இனி எதிர்காலத்தில் எல்லாம் தனியார்மயம் என இருக்கும் நிலையில், நீங்களே ஜாதி மூலம் உங்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரை தனியார் நிறுவனங்கள் ஒதுக்க ஏற்பாடு செய்வது சரியா ??


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை