உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

நீட் தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

திருப்பூர்:மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு 2024 மே 5ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. கடந்த 4ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது. ஒருபுறம் செய்முறை தேர்வும் நடந்து வந்ததால் தேர்வுக்கு விண்ணப்பிப்பது சுறுசுறுப்பாகவில்லை. இருப்பினும் பிப். இறுதியில் பலர் ஆர்வம் காட்டினர். இச்சூழலில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று இரவுடன் முடிவடைகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடந்து கொண்டிருப்பதால் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மாணவ - மாணவியர் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ