உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிகளை பின்பற்றியே பணி நியமனம் அரசு பிரமாண மனு தாக்கல் செய்யுமா? ஐகோர்ட் கேள்வி

விதிகளை பின்பற்றியே பணி நியமனம் அரசு பிரமாண மனு தாக்கல் செய்யுமா? ஐகோர்ட் கேள்வி

சென்னை:'எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே, பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்' என, தமிழக அரசு தலைமை செயலர் பிரமாண மனு தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதிலளிக்கும்படி, அரசு தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அரியலுார் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையில், 1997ல் கணினி உதவியாளராக சத்யா என்பவர் நியமிக்கப்பட்டார். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட தன்னை, பணி வரன்முறை செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, 12 வாரங்களில் முடிவெடுக்க, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களை நிரந்தரம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்கிறது. 'அனைத்து அரசு துறைகளிலும், எதிர்காலத்தில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் செய்யப்பட மாட்டாது; தேர்வு நடைமுறைகளை பின்பற்றியே, நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தலைமை செயலர் பிரமாண மனு தாக்கல் செய்வாரா?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து வரும் 13ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை