உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அப்போது எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கும் கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லை என்று பிரேமலதா கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த 2011ல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே கூட்டணியில் இருந்த கட்சிகளை ஆளுங்கட்சி ஆகவும், எதிர்க்கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தக்கூட்டணி தொடர்ந்தால், தி.மு.க., அரசியலில் இருந்தே காணாமல்போய் விடும் என்பதை உணர்ந்தசில துரோகிகள், சூழ்ச்சி செய்தனர்; கூட்டணியில் பிளவை ஏற்படுத்தினர். அப்போதைய முதல்வர் ஜெ.,க்கும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும், கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லை.டவுட் தனபாலு கமென்ட்: சட்டசபையில்,ஜெ.,யை பார்த்து, விஜயகாந்த் நாக்கை துருத்தி சவால் விட்டது...பதிலுக்கு ஜெ., 'இனி, தே.மு.தி.க.,வுக்கு அழிவுகாலம் தான்'னு சாபம் விட்டது எல்லாம் இன்னும் வீடியோ பதிவுகளா இருக்குது என்ற உண்மையை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிவா. தொதநாடு.
நவ 07, 2024 11:22

கௌரவமாக அரசியலில் இருந்து விலகி இருக்கும் சொத்து வைத்து மகாராணி போல வாழலாம். ஆனால் பேராசையும் அதிகார சுகமும் ருசி கண்ட பூனை போல ஆக்கிவிட்டது . அரசியல் ஒரு சாக்கடை என்று சும்மாவா சொன்னார்கள். அதில் புரண்ட வர்கள் இப்படி தான் இருக்கும் போல.


சுராகோ
நவ 07, 2024 11:59

தி மு க வை திட்டு றிங்கன்னு தெரியுது


முக்கிய வீடியோ