சென்னை: மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகியவற்றில், 124 கோடி ரூபாய் மதிப்பில் 17 பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் கோவில், 2.81 கோடி; விருதுநகர் கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் கோவில், 2.10 கோடி, திருவண்ணாமலை புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் கோவில், 1.56 கோடி. கிருஷ்ணகிரி அத்திமுகம் ஜராவதீஸ்வரர் கோவில், 1.31 கோடி; மதுரை, சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில், 1.52 கோடி ரூபாய் உட்பட மொத்தம் ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னை மாதவரம் கைலாசநாதர் கோவில். கோவை, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உட்பட 14 கோவில்களில், 51.1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
644 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணை யம் வாயிலாக, மக்கள் நல்வாழ்வு துறைக்கு, 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் டாக்டர்கள், 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 உளவியல் உதவி பேராசிரியர்கள், 17 மருந்து ஆய்வாளர்கள், 54 வட்டார சுகாதார புள்ளி யிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு, 644 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மருத்துவ ஊரக பணிகள் இயக்ககம் உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த பிரிவுகளுக்கான பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர்கள், பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, கணேசன், தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி நாங்குநேரி, திருச்சி தாத்தையங்கார்பேட்டையில், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரை கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அரியலுார் உட்கோட்டை, தர்மபுரி மாதேங்கலம், வேலுார் வளத்துார், கடலுார் அன்னவல்லி ஆகிய இடங்களில், புதிய நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், 11 மாவட்டங்களில், 49 பொது விநியோக கடைகள் கட்டப்பட்டு உ ள்ளன. இவ்வாறு 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி துறையால் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் பெரியசாமி, காந்தி, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.