உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதீஷ் குமார் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

நிதீஷ் குமார் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

பாட்னா: பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரை சுட்டுக்கொல்லப்போவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த விக்னேஷ் சதுர்வேதி, 25 , இவர் மும்பையில் டிப்ளமோ படித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப் 14ம் தேதி பீஹார் வந்திருந்த போது, சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்வர் நிதீஷ்குமாரை சுட்டுக்கொல்ல போகிறேன் என பதிவேற்றினார். அந்தவீடியோ வைரலானதையடுத்து கோட்வாலி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சதுர்வேதியையும், மேலும் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை