உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர்: சரமாரி தாக்கிய இளைஞர்கள்

ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர்: சரமாரி தாக்கிய இளைஞர்கள்

புவனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான வி.கே.பாண்டியன் மீது ஒரு நபர் தக்காளி வீசினார். இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் வி.கார்த்திகேய பாண்டியன். இவர், 2000ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடைய பதவி வழங்கப்பட்டது.அம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான வி.கே.பாண்டியன், கஞ்சம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் மீது ஒரு இளைஞர் ஒருவர் தக்காளியை வீசியுள்ளார். இதனால் கொதித்தெழுந்த மற்ற இளைஞர்கள் தக்காளி வீசிய நபரை தரதரவென இழுத்து சென்று தாக்கினர். நிலைக்குலைந்து கீழே விழுந்த அந்நபரை இளைஞர்கள் தொடர்ந்து தாக்கினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
பிப் 23, 2024 07:57

அங்கேயும் நம்ம திருட்டு கருப்பு கொடி காட்டும் கும்பல் போல் ஆட்கள் இருப்பார்கள் போல் தெரிகிறது.


Ramesh Sargam
பிப் 23, 2024 00:45

சான்றோர்களுக்கு பல இடத்தில் இருந்தும் வரும் ஆபத்து.


MARUTHU PANDIAR
பிப் 22, 2024 20:59

தவறாக நினைக்கக் கூடாது.கர்நாடகத்தை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பீகாரில் பல ஆண்டுகள் வாழ்ந்து , மக்களோடு மக்களாக கலந்து அரசியல் நடத்தி அம் மாநில மக்களால் எம்பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டார்+++ஆனால் இவர் நேற்று வரையில் ஒரு அதிகாரி தான்+++மக்களின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவர் தான்+++ ஆனால் திடீரென்று முதல்வரின் அடுத்த ஸ்தானத்துக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்++++அண்ணாமலை மக்கள் நல்லெண்ணத்தை நம்பி கர்நாடகத்தில் இப்படிச் செய்ய வில்லை+++சொந்த மாநிலத்தில் தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்+++அது போல் பாண்டியன் தமிழகத்துக்கு வந்து செய்யட்டும்+++இந்த விஷயம் வரும் தேர்தலில் பட்நாயக்குக்கு நிச்சயம் மக்கள் மூலம், மற்றும் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், சீனியர் நிர்வாகிகள் மூலமும் பின்னடைவை ஏற்படுத்தும்.


Ravichandran Ganesan
பிப் 23, 2024 07:44

ஐயோ பாவம் தங்களுக்கு இவரைப் பற்றி தெரியவில்லை. இவரைப் பற்றி சமீபத்திய ANI Interview YouTube ல் தேடிப் பார்க்கலாம்.


N Annamalai
பிப் 22, 2024 20:28

வன்மம் எதிர்ப்பு கையால் ஆகாத மனிதர்கள் .பாவம் எதிர்ப்பை கட்ட ஒரு வழி .


VENKATASUBRAMANIAN
பிப் 22, 2024 19:53

இதுதான் மக்கள் நேர்மையான அதிகாரிகளுக்கு கொடுக்கும் மரியாதை. யார் எதிர்த்தாலும் மக்கள் வருவார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒருவராவது உண்டா


Ramaraj P
பிப் 22, 2024 19:00

பாண்டியன் தான் அடுத்த முதல்வர் என பேசப்படுகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை