உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இவர் பயன்படுத்திய ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி மிகவும் ஆபத்தானது என தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி பயன்பாடு என்ன ? எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பின்வருமாறு: * ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி, 1950ம் ஆண்டு அர்மாலைட் (ArmaLite) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த துப்பாக்கி மிகவும் ஆபத்தானது. * ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் வகையில் அதி நவீன வசதியுடன் கூடியது. . * இந்த துப்பாக்கி பெரும்பாலும் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. * ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்டின் வேகம் அதிகம். குறி வைக்கும் பகுதியை விரைவில் சென்று அடையும். * ஒரு நொடியில் ஆறு கால்பந்து மைதானங்களை கடக்கும் வேகத்தில், புல்லட் வேகமாக பாய்ந்து குறிவைக்கும் நபரை கொல்லும் சக்தி கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anu Sekhar
ஜூலை 16, 2024 21:15

இந்த துப்பாக்கியை ஆதரித்தவரே டிரம்ப் தான் . தன் விநயே தன்னை சுடும்


rama adhavan
ஜூலை 16, 2024 23:29

பொய். இப்போதைய பைடன் ஏன் தடை செய்யவில்லை? காரணம் அமெரிக்காவில் எந்த கட்சியும், அரசும் துப்பாக்கி உபயோகத்தை தடை செய்யாது. முடியாது. சில தவறு நடந்தாலும் மக்கள் பாதுகாப்புக்கு இங்கு துப்பாக்கி அவசியம். தடையை மக்களும் விரும்பவில்லை.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 16, 2024 18:08

துப்பாக்கியின் பலமும், சுட்டவரின் திட்டமிடுதலும் கைகூடி வந்துள்ளது. ஆனால் குறி தவறியுள்ளதே இதில் இடிக்கிறது. இது தேர்தல் காலம் என்பதால் ட்ரம்ப்ன் அரசியல் ஸ்டண்டும் இதில் தீர விசாரிக்கப்பட வேண்டும். ட்ரம்ப் எந்த எல்லைக்கும் போகக் கூடியவர் என்பது சென்ற தேர்தல் முடிவில் அவர் நடத்திய கலவரங்கள் ஒரு சான்று. அஃதன்னியில் ட்ரம்ப் ஒரு ஆகச் சிறந்த வியாபாரி.


கர்ணன் கர்மபுரம்
ஜூலை 16, 2024 13:36

ஒரு இஞ்ச் தவறியிருந்தால் டிரம்ப் உயிர் அவ்வளவுதான்.. ஏதோ ஒரு சக்தி அவரை காப்பாற்றி உள்ளது


Saai Sundharamurthy AVK
ஜூலை 16, 2024 11:10

மஹாபாரத்தில் கர்ணன் விட்ட அம்பை, அர்ஜுனனின் உடம்பின் மீது படாமல் கிருஷ்ண பகவான் அர்ஜுனனைக் காப்பற்றினார். 1980களில் பூரி ஜெகன்னாத் ரதயாத்திரை அமெரிக்காவில் நடத்த டிரம்ப் பெரும் பொருளுதவி செய்து அந்த ரதயாத்திரையை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இந்துக்களின் மனதை குளிர்வித்தார். அதன் பலனாக இன்று அந்த ஜகன்னாதரே நேரில் வந்து டிரம்பின் உயிரை காப்பற்றியிருக்கிறார்.


Senthoora
ஜூலை 16, 2024 10:56

20 வயது வாலிபருக்கு எப்படி வந்தது இந்த துப்பாக்கி, இவர் பின்னால் பெரிய NET WORK இருக்கு. உயிருடன் பிடிக்காமல் விட்டார்கள். சுட்டவருக்கு அனுபவம் பத்தாது. காற்று திசை வேகம், குறியாளரின் அங்க அசைவுகளை கவனிக்கத்தவறிவிட்டார். இதனால் தான் டிரம்ப் தப்பினார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை