உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.இந்நிலையில், கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 22, 2025 11:42

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அண்ணே,அண்ணே, ட்ரம்ப் அண்ணே, எதுஎதற்க்கெல்லாமோ திடீர் திடீர் என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால் காலம் காலமாக நடக்கும், இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு உங்களால் ஒரு நிரந்தர முடிவு காணமுடியவில்லையே அண்ணே. மற்ற நாட்டவர்கள் விஷயங்களில் தலையிடும் நீங்கள், உங்கள் நாட்டில் இப்படி அடிக்கடி நடக்கும் பிரச்சினைக்கு முடிவு காண மாட்டீர்களா அண்ணே ? முன்பு நீங்கள் அதிபராக இருந்தபோதும் துப்பாக்கி சூடு பிரச்சினை இருந்தது. அப்பொழுதும் அண்ணே, நீங்கள் எந்த முடிவும் எடுத்து இந்த அவலத்தை தடுத்துநிறுத்தவில்லை. மீண்டும் இப்பொழுது அதிபர் பதவியில் உள்ளீர்கள். இப்பொழுதாவது ஏதாவது நடவடிக்கை எடுத்து இந்த அவலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்களா அண்ணே


சமீபத்திய செய்தி