உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டாலருக்கு போட்டியாக புது கரன்சியா: ஜெய்சங்கர் மறுப்பு

டாலருக்கு போட்டியாக புது கரன்சியா: ஜெய்சங்கர் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோஹா: '' டாலருக்கு போட்டியாக ' பிரிக்ஸ் ' அமைப்புக்கு என புது கரன்சி துவக்கும் எண்ணம் இல்லை '', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கியது பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமீரேட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்புக்கு என தனியாக பொதுவான கரன்சி உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதில் உள்ள சாதக பாதகங்களை இந்தியா முன்வைத்தது. பரிவர்த்தனைக்கான கரன்சியை மாற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை.இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ' டாலரை பொது கரன்சியாக பயன்படுத்துவதில் இருந்து விலக பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இதை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்துவிட்டது. டாலரை மாற்ற மாட்டோம். பொதுவான கரன்சியை உருவாக்க மாட்டோம் என உறுதிமொழியை பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அளிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும்' எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக கத்தாரின் தோஹா நகரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: டிரம்ப்பின் முதல் ஆட்சி நிர்வாகத்துடன் இந்தியா நல்லுறவை கொண்டு இருந்தது. வர்த்தகம் தொடர்பான சில பிரச்னைகள் மட்டுமே இருந்தன. பிரதமர் மோடி , டிரம்ப் இடையே தனிப்பட்ட உறவு உள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் கருத்து முக்கியம் என்ற போதிலும், டாலரின் மதிப்பு இழப்பை செய்யவில்லை எனக்கூறியுள்ளோம். பிரிக்ஸ் அமைப்புக்கு என தனி கரன்சி என்ற திட்டம் இல்லை. நிதிப் பரிமாற்றம் தொடர்பாக பிரிக்ஸ் ஆலோசிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

veeramani
டிச 10, 2024 10:02

அமெரிக்காவில் குடியறியுள்ள ஒயிட் ஸ்க்கின் வந்தேறிகள் ஆட்டம் ஒசாமா உள்ளது. இவர்கள் முதலில் குடியேறியவுடன் சிவப்பு இ ண்டியர்களி அனைவரையும் கொன்றனர். இன்று வரை அமெரிக்க பூர்வகுடிகள் சிவப்பு இ ண்டியர்கள் பதவியிலும் இல்லை. நாட்டை ஆண்டதுமில்லை அவ்வாறு இருக்கையில் டாலர் மட்டும்தான் இருக்கவேண்டும் என அனைவரையும் மிரட்டுவது சரியில்லை எனவே மாதா நாடுகள் வேறு பொதுவான கரன்சியை புழங்குவதுதான் அந்த மக்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்


அப்பாவி
டிச 08, 2024 16:02

அமெரிக்கா டீப் ஸ்டேட் இந்தியாவின் வளர்ச்சியை அழிக்கப்பாக்குதுன்னு சொல்றீங்களே? நிஜமா? அப்போ எதுக்கு டாலரை கட்டிக்கிட்டு அழுவுறீங்க?


Barakat Ali
டிச 08, 2024 19:11

அறியாமையில் உழலும் கொத்தடிமைகள் ......


அப்பாவி
டிச 08, 2024 10:44

நிதியமைச்சர் எங்கே? அமெரிக்கா போயிட்டாரா?


Jay
டிச 08, 2024 08:38

டாலர் நாடுகளை அடிமைப்படுத்துவதை எதிர்த்து தான் யூரோ கரன்சியை ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்தன. ஆனாலும் யூரோ டாலரை அசைக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருந்த போதிலும் இதை செய்ய முடியவில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கனவே எல்லை தகராறு உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான கரன்சி என்பதை எப்படி கொண்டு வர முடியும்? சீனாவை நம்பி ஒரு காரியத்தில் இறங்க முடியாது.


அப்பாவி
டிச 08, 2024 08:18

ப்ரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்காவை விட பெரிய சந்தை கிடையாது. சுனா ஏற்றுமதி பொருள்கள் மூலம் சம்பாரிச்சுது. இந்தியா சாஃஒவேர் ஆளுங்க ஏற்றுமதி மூலம் சம்பாரிச்சுது. இதுலே டாலர் என்னும் பொன்முட்டையிடும் வாத்தை யாரும் கொல்ல மாட்டார்கள்.


Kannan
டிச 08, 2024 08:15

A new BRICS currency can be used among the BRICS constituent countries


Perumal Pillai
டிச 08, 2024 00:05

This gentleman should become the Prime Minister of India even at the cost of replacing the current leader who has become a symbol of inaction and spinelessness. His no-nonsense attitude will stand him in good stead in tackling corruption and high profile thieves. He will uphold the tradition of Dharma while ruthlessly uprooting the enemies, both internal and external. He is the only person who would presumably take on the corruption model of Tamilnadu ushering in a new dawn for the Tamil people. Dr Jaisankar possesses the qualities necessary to eradicate the Diravida model and uphold Dharma while decisively eliminating internal threats. His no-nonsense attitude equips him to tackle challenges head-on and restore faith in effective leadership.


Barakat Ali
டிச 07, 2024 23:36

ஏற்கனவே கடந்த வருடம் ஆகஸ்ட்டிலேயே ஜெய்ஷங்கர் இதை மறுத்துள்ளார் ..... டாலருக்கு போட்டியாக புது கரன்சி என்கிற கருத்தாக்கம் பிரிக்ஸ் அமைப்பால் அதிகாரபூர்வமற்ற வகையில் பேசப்பட்டிருக்கலாம் ... ஆனால் யாருக்கும் அந்த முடிவெடுப்பதில் விருப்பமில்லை ... உதாரணமாக 2023 ஆகஸ்ட்டில் வந்த செய்திப்படி - ஆதாரம் ரூட்டர்ஸ் டாட் காம் - South African officials had said a BRICS currency was not on the agenda for the summit. In July, Indias foreign minister said, "there is no idea of a BRICS currency". Its foreign secretary said before departing for the summit that boosting trade in national currencies would be discussed. Russian President Vladimir Putin said the gathering, which ha attended via videolink, would discuss switching trade between member countries away from the dollar to national currencies.China has not commented on the idea. President Xi Jinping spoke at the summit of promoting "the reform of the international financial and monetary tem".


aaruthirumalai
டிச 07, 2024 23:35

ஆமாம் டாலரை மாற்றினால் சைனாவுக்குதான் இலாபம், இது நம்ம நாட்டுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை