உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி

எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி

அடிஸ் அபாபா: கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்நிலையில், அந்த சர்ச்சில் மறு சீரமைப்புக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மர சாரம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த பலர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில், 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ