உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 800 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 800 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் டில்லி உட்பட வட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின, இதனால் மக்கள் வெளியே விரைந்து சென்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgceo3kg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜலாலாபாத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 20 நிமிடங்களுக்கு பிறகு, மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், 800 பேர் உயிரிழந்தனர். மேலும் 2,500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கதால் வீடுகள் இடிந்து உள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ManiMurugan Murugan
செப் 02, 2025 00:41

ManiMurugan Murugan ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வரி த் தத் தை தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவன் துணையிருக்க வேண்டுகிறேன் கண்டிப்பாக இந்தியா உதவ வேண்டும் மத்தியரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 01, 2025 14:25

மோடி சார் நீங்க உடனே உதவி செய்யணும்


அன்பே சிவம்
செப் 01, 2025 12:13

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


Tamilan
செப் 01, 2025 08:50

நண்பர்களுக்கு வந்த சோதனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை