உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய ஐ.டி., இன்ஜினியரை சுட்டுக்கொன்றது அமெரிக்க போலீஸ்

இந்திய ஐ.டி., இன்ஜினியரை சுட்டுக்கொன்றது அமெரிக்க போலீஸ்

கலிபோர்னியா; அமெரிக்காவில், அறைத் தோழனை கத்தியால் குத்திய தெலுங்கானாவை சேர்ந்த ஐ.டி., இன்ஜினியரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தெலுங்கானாவின் மஹபூ ப் நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன், 30. ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப இன்ஜினியரான இவர் கலிபோர்னியா சாண்டா கிளாராவில் சில ந ண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருந்தார். அவரது வீட்டில் சண்டை நடப்பதாக போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்றபோது, நிஜாமுதீன் தனது அறைத் தோழனை கத்தியால் குத்திவிட்டு நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். இதைஅடுத்து போலீசார் நிஜாமுதீனை துப்பாக்கியால் சுட்டதுடன், அவர் பிடியில் சிக்கியிருந்த இளைஞரையும் மீட்டனர். புளோரிடா கல்லுாரியில் நிஜாமுதீன் கணினி அறிவியலில் முதுகலை ப் பட்டம் பெற்றவர். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபு ரிந்து வந்தார். தங்கள் மகன் அறையில் இனரீதியான துன்புறுத்தலை அனுபவித்து வந்ததாகவும், இதன் காரணமாகவே தகராறு நடந்திருக்கலாம் என்றும் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ram
செப் 25, 2025 15:44

இதுவே இங்கு நடந்து இருந்தால் கத்தியால் அடிபட்டவன் இந்நேரம் குண்டாசில் கைது செய்து இருப்பானுக. குத்தினவனை விட்டு இருப்பர்கள்.


ponssasi
செப் 20, 2025 13:26

நடந்தது அமெரிக்காவில் அறை மானவர்களுக்குள் தகராறு இதில் எங்கு மதம் வந்தது


Senthoora
செப் 21, 2025 07:35

வழக்கில் தப்பிக்கணுமே, அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒட்டி , பூனை குறுக்கால வந்ததால் விபத்து என்று ஒருவன் சொன்னான்.


ருத்ரன்
செப் 20, 2025 09:48

அந்த இஸ்லாமிய இளைஞன் சுடபட்டது கண்டிக்க தக்கது தான். காலில் சுட்டு பிடித்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன ரீதியான துன்புறுத்தல் கொடுத்திருந்தால் வேறு வீட்டுக்கு போயிருக்கலாமே. அதை விட்டு விட்டு பகைமையை வளர்த்து கத்தியால் குத்துவது நியாயமா. என்ன தான் பொறியியல் கணினி மருத்துவம் போன்ற படிப்புகள் படித்துவிட்டு வெளிநாடு சென்றாலும் இவர்கள் தங்கள் நியாயத்தை நிலைநிறுத்த ஆயுதங்களை உபயோகிக்க தயங்குவதில்லை.


MUTHU
செப் 22, 2025 09:40

இதை போன்றுதான் இங்குள்ள பட்டியலினத்தவர்களும். தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே இதனை கூறிவிடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை