வாசகர்கள் கருத்துகள் ( 1 )
apo ex pm ennachu
டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலை பிரதான எதிர்கட்சி புறக்கணித்து, பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வங்கதேச நாட்டில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, நாட்டின் 12 வது பொதுத்தேர்தல் இன்று காலை துவங்குகிறது.இந்நிலையில் இத்தேர்தல் நேர்மையாகவும் , நியாயமாகவும் நடைபெறவில்லை என கூறி பிரதான எதிர்கட்சியான வங்கதேச தேசிவாத கட்சி தேர்தலை புறக்கணித்து விட்டு 48 மணி நேர பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.இதனால் இன்று நடைபெறும் தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெறும் , ஷேக் ஹசீனா நான்காவது முறையாக பிரதமராக வர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
apo ex pm ennachu