உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகப்பெரிய அணை; பிரம்மபுத்திரா நதியில் கட்ட சீனா திட்டம்!

உலகின் மிகப்பெரிய அணை; பிரம்மபுத்திரா நதியில் கட்ட சீனா திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: பிரம்மபுத்திரா நதியில், உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g605z9ho&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்ராவில் கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.இந்த அணையைக் கொண்டு, 60 ஆயிரம் மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம் என்பது திட்டம். இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். புதிய அணை கட்டுவதன் மூலம், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர் அந்நாட்டு நிபுணர்கள். இந்த அணை, பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sampath Kumar
டிச 26, 2024 12:28

சீனா காரன் அவன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் தானே காட்டுகிறான் என்னமோ இந்தியாவில் உள்ள பகுதியில் காட்டுகிண்டர்ன்? மேலும் இந்த நதி மூலம் இந்தியாவில் இந்த இடத்தில விவசாயம் மற்றும் தொழில் வளத்திற்கு பயன் உள்ளதா வாங்க தேசத்தில் உண்டு இங்கே கிடையாது நம்ம ஜி வழக்கம் போல வாய் மோடி மௌன சாமியாராகி பழியை காங்கிரஸ் மீது எப்படி போடலாம் என்று யோசித்து கொண்டு இருப்பார்


Constitutional Goons
டிச 26, 2024 11:52

எப்போதும் போல் மோடி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டும், நாட்டு மக்களிடம் பீதியை கிளப்பி கொண்டும்தான் இருக்கும்.


சாண்டில்யன்
டிச 26, 2024 11:03

INDIA HAS RIPARIAN RIGHTS OF BRAHMAPUTRA. SHOULD GET SHARE OF ECLCTRICITY GENERATED. RIPARIAN RIGHTS ARE LEGAL RIGHTS THAT ALLOW LANDOWNERS TO USE WATER THAT FLOWS NEXT TO THEIR PROPERTY. THESE RIGHTS ARE BASED ON THE OWNERSHIP OF LAND ALONG RIVERS, STREAMS, CANALS, AND LARGER CULVERTS. RIPARIAN RIGHTS ARE USUFRUCTUARY, WHICH MEANS THAT THE LANDOWNER HAS THE RIGHT TO USE THE WATER, BUT THEY DO NOT OWN IT. INDIA HAS RIPARIAN LEGAL RIGHTS OVER RIVER BRAHMAPUTHRA, WHICH FLOWS 916 KMS THAT IS ONE THIRD OF ITS TOTAL LENGTH VIA ARUNACHAL PRATHESH AND ASSAM STATES AND HENCE GOVERNMENT OF INDIA SHOULD EFFECTIVELY TAKE UP THIS MATTER WITH CHINESE GOVERNMENT. SHOULD CLAIM TEN THOUSAND MEGAWATTS OF ELECTRICITY POWER GENERATED FROM THIS HYDROELECTRICITY PROJECT.


Akash
டிச 26, 2024 18:39

As if they will give...keep dreaming


Kumar
டிச 26, 2024 09:58

இந்தியாவும் பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை திருப்பி விட வேண்டும்..சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வேட்டு வைக்க வேண்டும்


Loganathan Kuttuva
டிச 26, 2024 09:36

பிரம்மபுத்ரா நதி வடகிழக்கு பகுதிகளில் பாயும் நதி .அடிக்கடி இந்த நதியில் ஏற்படும் வெள்ளங்களால் அஸ்ஸாம் மாநிலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது . அணை கட்டினால் வெள்ள பாதிப்பு குறையும் .


ரகுநாதன்
டிச 26, 2024 09:51

இதுவும் போர்க்கால உத்தியாக பயன்படுத்தப்படக்கூடிய ஒன்று. திறந்துவிட்டால் சொல்லொணா ஆபத்தே. ஆயுதங்கள் எந்த உருவத்திலும் உண்டு.


N.Purushothaman
டிச 26, 2024 09:36

சாத்தியமில்லாத திட்டங்களில் எல்லாம் முதலீடு செய்வதை சீன நிறுத்தி கொள்ள வேண்டும் ...ஏற்கனவே உள்ள அணையால் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது என்கிற நிலையில் இது போன்ற செயல்களை கைவிட வேண்டும் ...வேண்டுமானால் சீனாவில் ஓடும் கிளை ஆறுகளின் நடுவில் அணை அமைத்து அதை பயன்படுத்தி கொள்ளலாம் ...


subramanian
டிச 26, 2024 09:08

வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுயநலம் கொண்ட அரக்கர்களை அழிக்க வேண்டும். ராஜரீகரீதியாக இந்தியா எதிர்க்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:05

பங்களாதேஷ் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை... இந்தியா தடுக்க முனையவேண்டும் ....


GMM
டிச 26, 2024 09:00

திபெத், சீனாவிற்கு இன, கலாச்சாரம் ரீதியாக தொடர்பு இல்லாத நாடு. சீனா ஆக்கிரமிப்பு பகுதி. சீனா போன்ற துஷ்டர்களிடம் செல்வம் இருப்பது ஆபத்து. மேற்கத்திய நாடுகள் சீனா பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் .60 ஒரு சைக்கிள் இருந்த ஏழையின் நாடு. உலகம் முழுவதும் வளங்களை சீனா கைப்பற்றி வருகிறது. சீனா ஒரு மர்ம தேசம். அணை கட்ட இந்திய, உலகம் அனுமதிக்க கூடாது. கட்டிய அணையை கைப்பற்ற வேண்டும். திபெத் , நேபாளம் , வங்கதேசம் .... இந்திய பகுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை