உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எத்தியோப்பியாவில் சோகம்: தேவாலய கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி

எத்தியோப்பியாவில் சோகம்: தேவாலய கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடிஸ்அபாபா: எத்தியோப்பியாவில் கட்டுமானப் பணி நடந்து வந்த தேவாலாயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 25 பேர் உயிரிழந்தனர்.எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர். அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். எனது மூன்று நண்பர்களும் உயிரிழந்தனர். விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kulandai kannan
அக் 02, 2025 15:56

ஆமை புகுந்த வீடும், புகுந்த நாடும்


suresh Sridharan
அக் 02, 2025 13:29

விபத்து எங்கேயும் எப்போதும் நடக்கக் கூடிய ஒன்று வருத்தத்தை பதிவு செய்ய வேண்டும் அபத்தமான வார்த்தைகள் அல்ல ஆழ்ந்த வருத்தம் அது எம்மதமானாலும்


Field Marshal
அக் 02, 2025 13:27

வாடிக்கன் நிவாரணம் அளிக்க வேண்டும் ...


பிரேம்ஜி
அக் 02, 2025 12:49

வருத்தமான நிகழ்வுகள்!


Svs Yaadum oore
அக் 02, 2025 11:48

விடியல் திராவிடனுங்க இதுக்கு கேள்வி கேட்பானுங்களே ...


Svs Yaadum oore
அக் 02, 2025 12:13

எதுக்கு அங்கே போகணும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை