உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய கிரிப்டோ ராணி

 சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய கிரிப்டோ ராணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விலையுயர்ந்த ஆடைகள், பொருட்கள், 60,000-க்கும் மேற்பட்ட பிட்காயின் தொடர்பான தகவல்கள் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பிட்காயின்களின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும். மேலும், ஸ்வீடனில் கோட்டை வாங்க வேண்டும், லிபர்லாந்து ராணியாக வேண்டும் என்று எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். யாடி ஷாங் என்ற பெயரில் இருந்த அந்தப் பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது, சீனாவைச் சேர்ந்த ஷிமின் கியான், 47, என்பது தெரியவந்தது. அவர் சீனாவில் இருந்து தப்பி லண்டனுக்கு வந்த தலைமறைவு குற்றவாளி என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். சீனாவில், 'லான்டியன் கெருய்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷிமின் கியான், முதியோர், ஓய்வூதியதாரர்களை குறிவைத்து கிரிப்டோ கரன்சி மோசடியை அரங்கேற்றியுள்ளார். 'படுத்துக் கொண்டிருக்கும்போதே பணக்காரர் ஆகுங்கள்' என்று ஆசையை துாண்டி ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடு செய்ய வைத்துள்ளார். கடந்த, 2017-ல் திட்டம் சரிய ஆரம்பித்ததும், சீன அதிகாரிகள் விசாரணை துவங்கினர். பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டு தப்பியோடி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். கடந்த, 2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஷிமின் கியானுக்கு, இந்த வாரம் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V.Mohan
நவ 14, 2025 08:26

இந்த மாதிரி பணம் ஏமாற்றுக்காரர்கள், தகுதியற்ற அகதிகள், பாலியல் குற்றவாளிகள் போன்றவர்களுக்கு இங்கிலாந்து தஞ்சமளிக்கிறது. அங்குள்ள தொழிலாளர் கட்சி தங்களுடைய வாக்குவங்கிக்காக இது போன்ற கிரிமினல்களுக்கு ஒத்துழைப்பு தருகிறது. பண பரிமாற்றங்களுக்கு எந்தவித கண்ட்ரோலும் இல்லை. நம் நாட்டில் அதிக மதிப்புள்ள பரிமாற்றங்களுக்கு காகிதப் பணம் தடை செய்யப்பட்டு, வங்கிகள் மூலமே நடைபெற முடியும். ஆனால் இங்கிலாந்தில் எவ்வளவு பெரிய காகித பண மாற்றமும் செய்ய முடியும். அது தீவிரவாதிகள் மற்றும் கிரிமினல்களுக்கு வசதியாக உள்ளது. மேலும் தொழிலாளர் கட்சி தேவையற்று விதண்டாவாதத்துடன், அகதிகளாக தஞ்சம் கோரும் முஸ்லீம்களையும் போர் நடக்கும் நாட்டு மக்களை பாவப்பட்ட மக்களாக சித்தரித்து இங்கிலாந்து அரசு அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்தது. அதனால், இந்த நிலமை. அங்கே அரசாங்கம் ஏமாற்றுக்காரர்களை எந்த விதத்திலும் தண்டிப்பதே இல்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 13, 2025 11:22

அறிவு இருந்து என்ன பயன் நமது வக்கீல்களிடம் ஆலோசனை பெற்றிருந்தால் இங்கேயே ஒரு மாநிலத்தை வளைத்து பிடித்து நல்ல முறையில் செட்டில் ஆகி இருக்கலாம். அது முடியாவிட்டால் கூட பரவாயில்லை பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். வழக்கு நடந்தால் கூட கோர்ட் பக்கமே போகாமல் இருந்திருக்கலாம். அதற்கும் மீறி எதாவது தண்டனை ஒரு வருடமோ இரண்டு வருடமோ கர்நாடக சிறையில் ஸ்டார் ஓட்டல் அந்தஸ்து அறையில் ஓய்வெடுத்து இருக்கலாம். பின் குறிப்பு தண்டனை என்பது கிடைக்கும் பல வருடங்கள் ஆகலாம். அது வரை சுதந்திரமாக கோர்ட் போலீஸ் பந்தோபஸ்துடன் ஜாலியாக இருந்திருக்கலாம்.


aaR Kay
நவ 13, 2025 09:33

ஒங்கோல் குடும்பத்தினர் மனித புனிதரா?


VENKATASUBRAMANIAN
நவ 13, 2025 08:15

அம்பானி நீரவ் மோடியிடம் பயிற்சி பெற்றிருப்பார் போலும்


பாரத புதல்வன்
நவ 13, 2025 09:30

பயிற்சி பெற்றதால் இந்த அளவுக்கு விஞ்ஞானபூர்வ குற்றத்தை புரிந்துள்ளார்.


Ramaraj P
நவ 13, 2025 07:15

2017 ல் பிட்காயின் விலை 60000 இப்போது 1 கோடி. இந்த பெண் ஏமாற்றிய பணத்துடன் இரண்டு மடங்காக திருப்பி தர முடியும்.


Thravisham
நவ 13, 2025 07:12

எல்லோருக்கும் நாமம் சாத்தி லண்டனிலேயே டேரா போடுவது எப்படி என்று விஜய் மால்யாவிடம் பாடம் கத்துக்கவில்லையோ? அல்லது திருட்டு த்ரவிஷ முதல் குடும்பத்திடம் லண்டன் துபாய் ஜெர்மனி என்று பல நாடுகளில் ஊழல் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று கற்று கொள்ளவில்லையோ?


Rangarajan Cv
நவ 13, 2025 06:24

Doubtful whether extradition will ever take place. Many big business man from our country, who are already charged on economic offenses,are living there and still no extradition. May be this case will set the things right because of China’s strong global influence, which we lack?


raja
நவ 13, 2025 06:08

என்ன இருந்தாலும் ஒரு 50000 கொடிக்கெல்லாம் மாடி இருக்க கூடாது.. நம்ப திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் லட்சம் கோடிகளில் கொள்ளை அடித்து விட்டு எப்படி அசால்டா உத்தமனுவோ போல மாட்டிக்காம வலம் வர்ரானுவோ பாருங்க ... இவனுவோ கிட்ட இந்த அம்மணி பாடம் படிக்கணும்....


சாமானியன்
நவ 13, 2025 05:44

இரண்டு அரசாங்கங்களை ஏமாற்றிய பலே கில்லாடிதான் இந்தப் பெண்.


Senthoora
நவ 13, 2025 06:38

அதிலும் ஒரு அதிஷ்டம், லண்டனில் மாட்டியது. சீனாவில் மாட்டியிருந்தால் நேரா தூக்குமேடைதான்.


Kasimani Baskaran
நவ 13, 2025 03:55

பெயர் மாற்றி வேறு பாஸ்போர்ட்டில் திரும்ப இங்கிலாந்து சென்று ஒரு மில்லியன் பவுண்டு வீடு வாங்கும் பொழுது மாட்டிக்கொண்டார்..


Senthoora
நவ 13, 2025 06:36

இந்த க்ரிப்டோ ராணிக்கு வாயோதிபர்களின் சாபம் விட்டுவைக்கவில்லை, இவர் மாதிரி ஏமாற்றுபவர்கள், அழகான பெண்கள் போல படங்களை போட்டு வசிகரித்து தங்கள் வழுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். கர்மா விடாது துரத்தி பிடித்திவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை