வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டொமினிக்கும் மோடியின் இந்தியாவின் நண்பர்களா?. யார் எக்கேடுகெட்டு போனால் என்ன ?
சாண்டோ டொமிங்கோ: டொமினிக் குடியரசில் இரவு விடுதி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 218 ஆக அதிகரித்து உள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:டொமினிகன் குடியரசில் நேற்று இரவு, விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்து உள்ளது. இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் முடிந்துவிட்டன. காயமடைந்தவர்களை மீட்பதிலும், இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப்படையினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அவசர கால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜுவான் மானுவல் மென்டெஸ் கூறுகையில்,இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் இருந்து 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.பேரிழிவுக்கான காரணம் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
டொமினிக்கும் மோடியின் இந்தியாவின் நண்பர்களா?. யார் எக்கேடுகெட்டு போனால் என்ன ?