உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் படுகாயம்

அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பாருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.இந்நிலையில், அமெரிக்கா, அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டல்கள், பாருக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bahurudeen Ali Ahamed
செப் 22, 2024 20:01

கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்று சும்மாவா சொன்னார்கள்,இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அநியாயமாக பலியாகிறார்கள்.


Iyer
செப் 22, 2024 16:35

“சர்வதேச அளவில் செயப்பட்ட கொலைகள்” மற்றும் “சர்வதேச அளவில் வழங்கப்பட்ட ஆயுதங்கள்” காரணமாக அமெரிக்கா செழித்து வருகிறது. ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டில் நடக்கும் கொலைகள் காரணமாக அதே அமெரிக்கா வேகமாக சீரழிந்து வருகிறது


P. VENKATESH RAJA
செப் 22, 2024 15:18

நான் பார்த்தவரை இந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது இதனை தடுக்க ஜோ பைடன் தலைமையிலான அரசு தூங்கிவிட்டது


MUTHU
செப் 22, 2024 21:26

எதெற்கெடுத்தாலும் மோடி பற்றி குறை சொல்வது போல் அமெரிக்கா ஜனாதிபதி குறை சொல்கின்றார்கள். அமெரிக்கா ஜனாதிபதி என்பவர் பெரும்பாலும் வெளியுறவு பற்றிய முடிவுகளையே தீர்க்கமாய் எடுக்க முடியும். தன்நாடு பற்றிய மற்ற முடிவுகளை எடுக்கும்பொழுது தனது கட்சியினரிடமே முதலில் வாக்கெடுப்பு செய்ய வேண்டும். பின்பு ஒட்டுமொத்த வாக்கெடுப்பில் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணங்களின் தனிப்பட்ட முடிவும் இதில் முக்கியம். கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் அமெரிக்கா ஜனாதிபதி என்பவர் ஒரு பொம்மலாட்ட பொம்மையே. நிர்வாக விஷயத்தில் ஒவ்வொரு மாகாணமும் ஒரு தனி நாடு போன்ற அதிகாரம் படைத்தவை.. அவர்களே இதை போன்ற விஷயங்களில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். அதிபர் கூட இதில் சிறிதளவும் தலையிடமுடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை