உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக வர்த்தகம் முதல்முறையாக 35 டிரில்லியன் டாலரை கடக்கும்; ஐநா கணிப்பு

உலக வர்த்தகம் முதல்முறையாக 35 டிரில்லியன் டாலரை கடக்கும்; ஐநா கணிப்பு

நியூயார்க்: இந்தாண்டு இறுதிக்குள் உலக வர்த்தகம் முதல்முறையாக 35 டிரில்லியன் டாலரை கடக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; 2025ம் ஆண்டில் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளே உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் இறக்குமதி வலுவாக இருந்த போதும், சீனாவின் இறக்குமதி பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய கணிப்புகள் அப்படியே தொடர்ந்தால், 2025ம் ஆண்டு இறுதிக்குள் உலக வர்த்தகம் 35 டிரில்லியன் டாலரைத் தாண்டும். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, சுமார் 7 சதவீதம் அதிகமாகும். இதில், சரக்கு வர்த்தகம் மட்டும் கடந்த ஆண்டை காட்டிலும் 6 சதவீதம் (1.5 டிரில்லியன் டாலர்) பங்களிப்பை கொடுத்துள்ளது. போர்கள், சர்வதேச அரசியல் நெருக்கடிகள், அதிகரித்த செலவுகள் மற்றும் உலகளவில் நிலவிய சீரற்ற தேவை உள்ளிட்ட காரணங்கள், வர்த்தக வளர்ச்சியின் வேகத்தை பாதித்த நிலையிலும், 2025ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வர்த்தம் தொடர்ந்து விரிவடைந்துள்ளது. 2025ம் ஆண்டின் 3வது காலாண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், ஏப்ரல் - ஜூன் வரையிலான 2ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக வளர்ச்சி நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. மெதுவான உலகளாவிய பொருளாதார செயல்பாடு, அதிகரித்த கடன் மற்றும் வணிகச் செலவுகள் போன்ற காரணங்களால், வர்த்தக செயல்திறனை பாதிக்கிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

ஒரு மில்லியன் = பத்து லட்சம் ஒரு பில்லியன்= 100 கோடி ஒரு டிரில்லியன்= ஒரு லட்சம் கோடி ஒரு அமெரிக்க டாலர் = 90 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி