உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு; உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என மிரட்டல்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு; உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளை, கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்து எரித்தனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. 'முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிந்துக்கள் நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; உங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் எஞ்சாது. உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது' என, பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.

தேர்தல் நடக்கும்

மேலும், ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய உடலை, மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர். அங்குள்ள பத்திரிகை அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், மாணவர் அமைப்பின் மற்றொரு தலைவர், முகமது மொதாலெப் சிக்தார் மீது நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தலையில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் சிறப்பு துாதர் செர்ஜியோ கோர், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து நேற்று பேசினார். இருவரும், 30 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சின்போது, நாட்டின் ஜனநாயக மாற்றத்தை தடுக்கும் நோக்கில் முந்தைய ஆட்சியாளரின் ஆதரவாளர்கள் வன்முறையை துாண்டி வருவதாக யூனுஸ் குற்றஞ்சாட்டினார். மேலும், ஹாதி படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்த யூனுஸ், வன்முறை, பதற்றமான சூழல் நிலவும் போதிலும், அறிவிக்கப்பட்ட தேதியில் வங்கதேசத்தில் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார். இதற்கிடையே, வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் ஹிந்துக்களான ஜெயந்தி சங்கா மற்றும் பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தினர்.

கடைசி எச்சரிக்கை

நள்ளிரவு நேரத்தில் வைக்கப்பட்ட தீயில், வீடுகள் மளமளவென எரிவதைக் கண்ட அவர்களது குடும்பத்தினர், வேலியை பிரித்துக் கொண்டு கடைசி நேரத்தில் உயிர் தப்பினர். இருப்பினும், இவர்கள் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும், வளர்த்து வந்த செல்ல பிராணிகளும் தீக்கிரையாகின. இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகே, ஹிந்துக்களை மிரட்டும் வகையிலான ஒரு பதாகை கண்டெடுக்கப்பட்டது. வங்க மொழியில் எழுதப்பட்ட அந்த பதாகையில், 'இங்குள்ள ஹிந்துக்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறீர்கள்; இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயல்களில் நீங்கள் ஈடுபடுவதாக குற்றஞ் சாட்டப்படுகிறீர்கள். 'உங்களின் நடமாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் எஞ்சாது. உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இதுவே, உங்களுக்கு விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கை' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளை நாடு திரும்புகிறார் கலிதா ஜியா மகன்

வங்கதேசத்துக்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், நாளை வங்கதேசம் திரும்புகிறார் தாரிக் ரஹ்மான். வரும் தேர்தலிலும் போட்டியிட உள்ளார்.Gallery

டில்லியில் வங்கதேச துாதரகம் முற்றுகை

வங்கதேசத்தை சேர்ந்த ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் படுகொலையை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் டில்லியில் உள்ள வங்கதேச துாதரகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். இதில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்கூட்டியே கணித்த டில்லி போலீசார் பல அடுக்குத் தடுப்புகளை அமைத்தனர். கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். துாதரகப் பகுதியை நோக்கி செல்ல அனுமதி இல்லை என போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் தடுப்புகளை துாக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு கடும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளே நுழைந்தவர்கள் அனைவரும் இரண்டாம் தடுப்பில் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தின் போது, வங்கதேச அரசை விமர்சிக்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 'வங்கதேசத்தை புறக்கணிப்போம்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் அந்நாட்டு கொடியுடன் கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். ஒரு இடத்தில் முகமது யூனுஸ் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள வங்கதேச துணை துாதரகம் முன்பும் ஹிந்து அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

முத்தையா
டிச 24, 2025 20:13

வேதனை அளிக்கிறது. இங்கே பெரும்பான்மையினரின் அடைக்கலத்தில் சுக போக மாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


பாரதி
டிச 24, 2025 16:15

வளைகுடாவிலிருந்து கொள்ளையர்கள் வந்தார்கள் கொன்றார்கள் வென்றார்கள் பிடுங்கினார்கள் இன்னமும் கொள்கிறார்கள்


Haja Kuthubdeen
டிச 24, 2025 10:35

நம் அரசு இது சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது...வெறுமனே சம்மன் அனுப்புவதால் இவைகளை தடுத்து நிறுத்த முடியுமா???இந்திய அரசு தலையிட்டால் மட்டுமே அநீதியை தடுத்து நிறுத்த முடியும்.பாக்கிஸ்தான்..பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பெயரளவுக்கே அரசுகள்.அரசுக்கு கட்டுப்படாத மக்கள் அவர்கள்.ஆயிரம் பிரட்சினைகள் இருந்தாலும் நம் நாட்டிற்கு ஈடா எவனுமே இல்லை.


V RAMASWAMY
டிச 24, 2025 08:42

High time our Central Government interfered by taking it up in UN and taking direct action against these atrocities supported by their Government and other external sources.


Rajarajan
டிச 24, 2025 08:17

இந்தியாவிலும் இதுபோன்ற சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்த பிரிவினர் செய்துகொண்டுதான் உள்ளனர். இது ஸ்லோ பாய்சன். இரண்டு தலைமுறை கழித்து தான் இதன் வீரியத்தை உணர்வோம். அதற்குள் எல்லாம் தலைக்கு மீறி சென்றிருக்கும். இதை முளையிலேயே கிள்ளை எறியவேண்டும். திருப்பரங்குன்றம் ஒரு சிறந்த உதாரணம். இவர்களுக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளுக்கு, நாமும் தொடர்ந்து ஆட்சி உரிமை தந்துகொண்டு தான் உள்ளோம். இது யார் தவறு ?? இந்தியா நமது நாடு என்று மார்தட்டுபவர்களை விட, இந்தியாவை வெளியில் திட்டி தீர்க்கும் மற்றும் மதவெறியுடன் பாகுபாடு காட்டுபவரைதான் நான் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கிறோம். தவறு நமதே. பணத்திற்கும், இலவசதிருக்கும், மதுவுக்கும் அடிமை ஆக்கி, சுயமரியாதையை நாமே இழக்கிறோம். தேர்தல் வருகிறது. உணர்ந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது.


சந்திரன்
டிச 24, 2025 07:33

முஸ்லிம்கள் எங்கள் ரத்தம் உடன்பருப்பு என ஊளையிடும் இந்துக்களே இதுதான் இங்கேயும் உங்களுக்கு நடக்கும். அந்த மத வெறியர்கள் என்றைக்கும் உங்களை சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணருங்கள் எச்சரிக்கையாக இருங்கள்


நெல்லை பாஸ்கர்
டிச 24, 2025 07:03

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்தாலே இது போல் பயமாகத்தான் இருக்கிறது.


Kannan
டிச 24, 2025 05:53

நமது பிரதமர் திரு. மோடி அவர்கள், நமது சிங்கநிகர் ராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்.


MUTHU
டிச 24, 2025 08:52

முட்டாளா நீயி. தரித்திரம் தள்ளி போயிடுச்சின்னு விட்டு தள்ளுவியா.


Venkatesan Srinivasan
டிச 25, 2025 12:55

1971 ல் முக்திவாஹினி படைகளுக்கு இந்திய ராணுவம் உதவி செய்தது போல இந்திய எதிரிகள் ரோஹிங்யாக்கள் தவிர்த்த நிலப்பரப்பு வங்கதேச வாழ் இந்துக்களுக்கு மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நம் மேற்கு வங்க மாநிலத்தின் எல்லை பகுதிகளை ஒட்டி அமைய நம் மேற்கு வங்கத்தில் குடிகொண்டுள்ள இந்து இந்திய விரோத விஷங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீரியத்தை இழந்து உணர்வற்ற நிலை எய்தும். பகைவர்களை ஒடுக்குவதில் எந்த ஜீவகாருண்யமும் காட்டலாகாது.


pmsamy
டிச 24, 2025 05:48

உலகத்தில் எங்கே பிரச்சனை நடந்தாலும் அதை தேர்வு செய்ய ஐநா சபை முயற்சிக்க வேண்டும் வேடிக்கை பார்க்க கூடாது


Nandakumar Naidu.
டிச 24, 2025 05:01

மதிய அரசாங்கம் பங்கதேஷி ஹிந்துக்களை திரும்ப அழைத்து வரவேண்டும். மேலும் பங்களாதேஷின் வரைபடத்தின் எல்லையை மாற்ற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை