உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zmhm6e1z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாக்குதல் துவங்கியது முதல் இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. சீனாவும் அதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. இரு நாடுகளும் விரைவில் பதற்றத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

நன்றி

இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன். அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாக்., அறிவிப்பு

பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார்.இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் ஆசிம் மாலிக் ஆகியோருடன் கடந்த 48 மணி நேரமாக நானும், துணை அதிபர் வான்சும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பிரதமர்கள் மோடி மற்றும் ஷெரீப் ஆகியோரை, அவர்களின் அமைதிக்கான பாதையை தேர்வு செய்வதில் அவர்கள் காட்டிய பொறுமை, அறிவு மற்றும் தலைமைப்பண்புக்காக பாராட்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மார்க் ரூபியோ தெரிவித்து உள்ளார்.

நன்றி

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், மார்க் ரூபியோ உள்ளிட்ட அதிபரின் குழுவினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் நிறுத்தம் ஏற்பட கடுமையாக உழைத்த இந்தியா , பாகிஸ்தான் தலைவர்களுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

தமிழ்வேள்
மே 13, 2025 08:21

ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் வகையில் அண்ணன் டிரம்ப், அமெரிக்க சுடாலினார்...ஒன்லி கட்டுமரம் மிஸ்ஸிங்


Vaduvooraan
மே 11, 2025 06:21

இரட்டை கோபுர தாக்குதலுக்காக பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து போட்டுத் தள்ளுவது அவர்கள் உரிமை ஆனால் அப்பாவி ஹிந்து சுற்றுலா பயணிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொன்றதற்காக நாம் பாகிஸ்தானை தாக்கினால், உலக சமாதானம் பற்றிய கரிசனத்தில் போர் நிறுத்தம் அமெரிக்காவின் முயற்சி குரங்கு மத்தியஸ்தம் மாதிரித்தான்


எம். ஆர்
மே 11, 2025 03:16

இங்கு எந்த நாட்டுக்காரனும் நம்மை பாராட்டுகிறான் என்றால் அந்த நாட்டுக்காரனிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இந்த கலியுகத்தில் அவனுக்கு ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான் அமெரிக்காகாரன் வந்து மத்தியஸ்தம் செய்யும் அளவுக்கு நாம் ஒன்றும் முதுகெலும்பு இல்லாத நாடு இல்லை அவன் காலம்காலமாக ஆப்கானிஸ்தானை பிடிக்க வளர்த்த தீவிரவாதம் எங்கு அழிந்துவிடுமோ என பயந்து பெரியன்னன் நமக்கு உதவுவது போல வருகிறான் கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்ப கூடாது என்பார்கள் அதே போல சீனாகாரன் அவன் துலுக்கன் நாட்டில் செய்த முதலீட்டை எடுக்க அவன் சமாதானம் பேச வருகிறான் இந்த கேடுகெட்ட துலுக்கன்கள் வாழும் நாட்டை ஒரு புல் கூட முளைக்காத அளவு ஈவு இரக்கம் இல்லாமல் கருவறுக்க வேண்டும் நாம் சுயமாக முடிவெடுக்க விடாமல் பெரியன்னனும் குள்ளனும் வருகிறானுகள் நாம் ஒன்றும் காந்தி காலத்தில் இல்லை இனி பேதி புடுங்கும் அளவு தயவு தாட்சண்யம் பார்க்காமல் துளுக்கன்களை கருவறுக்க வேண்டும்


கிஜன்
மே 11, 2025 00:37

விஸ்வகுரு ...மாவீரன் அண்ணன் டிரம்ப் வாழ்க ....


ديفيد رافائيل
மே 10, 2025 22:56

அடுத்தவங்க country ஐ ஒட்டு கேட்கிறது மட்டும் தான் இவரொட பொழப்பு போல.


bharathi
மே 10, 2025 22:00

it's a JOKE


Nandagopal Thangarasu
மே 10, 2025 23:24

அமெரிக்கா ட்ரைம்ப் என்ன சர்வாதிகாரியா?


Nagarajan D
மே 10, 2025 21:19

எப்படியோ அமெரிக்கா காரன் தன்னோட வியாபாரத்தை பொறிக்கிஸ்தானிடம் முடித்துக்கொண்டான்... அமெரிக்கா பொறிக்கிஸ்தானிடம் நீ சீனாக்காரனிடம் வாங்கிய எந்த ஆயுதமும் நீ உபயோகப்படுத்தி எந்த ஆட்டமும் ஆட முடுயவில்லை இந்தியாவிடம் உள்ளது ரஷ்யா s 400 நாங்கள் அமெரிக்கா ஆயுதங்களை உனக்கு குறைந்த விலையில் விற்கிறோம் நீ வாங்கி பயன்படுத்து.. இந்தியாவை அடக்க அமெரிக்கா காரனுக்கு பாகிஸ்தான் தேவை... அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்... அவனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய், ரஷ்யா ஆயுதங்களை வாங்கிய இந்தியாவை பாகிஸ்தானை கொண்டு அடக்குவது முதலாவது இரண்டாவது சீனாவையும் அடக்கி மீண்டும் பாகிஸ்தானை தன் கைப்பாவையாக வைத்து தனது ஆயுதங்களை விற்பது


ஜெய்ஹிந்த்புரம்
மே 10, 2025 21:10

பாகிஸ்தானை சரண்டர் செய்ய வைக்கும் வரை சண்டை போடாமல் நடுவில் நிறுத்தி என்ன பிரயோஜனம்?


mohan
மே 10, 2025 21:04

திரு ட்ரம்ப் அவர்களின் பொதுவான பேச்சுக்கள், தைரியமும், வெளிப்படை தன்மையும் உள்ளதாக , பல நாட்டு தலைவர்களுடன் பேசும் போது தெரிகிறது...


N Srinivasan
மே 10, 2025 20:45

எங்கே நமது Velan Iyengar ?????


வாய்மையே வெல்லும்
மே 10, 2025 21:35

போர்கிஸ்தானில் சொந்தங்களுக்கு கைகால் முறிவு. அடிலெய்டில் இருந்து எலும்பு முறிவு மருந்து எடுத்துட்டு போர்க்கிஸ்தானுக்கு பறந்து சொந்தங்களுக்கு மாவுக் கட்டு போட்டுட்டு இருக்கார்.. அவர் ரொம்ப பிசி. அந்நியநாட்டு கைக்கூலி ரத்தசொந்தங்கள் அடிவாங்கிவது அவருக்கு நெஞ்சிலே வேலை பாய்ந்தது போல உள்ளதாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை