உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

வாஷிங்டன்: சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியர்கள் உட்பட அங்கு பணியாற்றும் வெளிநாட்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி சார்பில், ஒரு மசோதா அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய அழகான மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, அமெரிக்காவில் இருந்து சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.இது, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் 23 லட்சம் இந்தியர்கள், பல விசாக்கள் வாயிலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாக தங்குவதற்கான அனுமதி பெற்றவர்கள், எச்1பி உள்ளிட்ட விசா வைத்துள்ள இந்தியர்கள், இனி சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், 5 சதவீதம் வரியை செலுத்த வேண்டும். இதைத் தவிர, அமெரிக்காவில் வசிக்காத, அதே நேரத்தில் அங்கு செய்துள்ள முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினாலும், இந்த வரி விதிக்கப்படும்.இந்த மசோதா, அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

5 சதவீதம் என்பது

மிகப்பெரிய சுமைஇம்மசோதா வரும் 26ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில், தென் மாநிலத்தவர் அதிகம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3.5 லட்சம் பேர்.அமெரிக்காவில் இருந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புபவர்களில் இந்தியர்களே அதிகம். பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாயை சொந்த நாட்டுக்கு அனுப்புகின்றனர். இதில், 2.82 லட்சம் கோடி ரூபாய், அமெரிக்க வாழ் இந்தியர்களால் அனுப்பப்படுகிறது. இது, 27 சதவீதம். வளைகுடா நாடுகளில் இருந்து 19 சதவீதம், பிரிட்டனில் இருந்து 10.4 சதவீதம் வருகிறது.அமெரிக்காவில் வருமான வரி அதிகபட்சம், 35 சதவீதம். மேலும், சொந்த நாட்டுக்கு பணம் அனுப்ப, 5 சதவீதம் வரி என்பது கூடுதல் சுமை. கூடுதல் வரியை தவிர்க்க, உடனடியாக இந்தியாவுக்கு பணம் அனுப்பாமல், சில காலத்துக்கு அங்கேயே சேமித்து வைக்க, அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவெடுக்கக் கூடும். அமெரிக்காவில் பணச் சுழற்சியை அதிகரிக்க, இது போன்ற முடிவை அதிபர் டிரம்ப் எடுத்திருக்கக்கூடும். ஒரு வருமானத்துக்கு இரண்டு இடங்களில் வரி என்பதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த 5 சதவீத வரிக்கு, குறைந்தபட்ச வரம்பு ஏதும் குறிப்பிடவில்லை. வருமான வரியில் இருந்து கழித்துக் கொள்ளப்படுமா என்பது குறித்தும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. இந்தியாவில் இது போன்ற வரி இருப்பினும், வரியில் கழித்துக் கொள்ள முடியும். இந்திய அரசு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.- கார்த்திகேயன்ஆடிட்டர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Suppan
மே 18, 2025 13:01

ஹவாலா ஆசாமிகளுக்கு கொண்டாட்டம்தான். டிரம்புக்கு இந்தியர்களைப் பற்றித் தெரியவேண்டும்


தாமரை மலர்கிறது
மே 18, 2025 07:29

அமெரிக்காவின் பணம் பலநாடுகளுக்கு செல்வதை தடுக்க இந்த வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளர்க்கும். ட்ரம்பை தேர்ந்தெடுத்தவர்கள் அமெரிக்கர்கள். அவர் அவர்களின் நலனிற்காக உழைக்கிறார். ட்ரம்பை போன்று மோடியும் இந்தியாவிற்காக உழைக்கிறார். பக்கத்துக்கு நாட்டிற்காக உழைக்கும் ராகுல் ஒருக்காலும் பிரதமர் ஆகமுடியாது.


Kasimani Baskaran
மே 18, 2025 07:09

கிரிப்டோ மூலம் அனுப்ப வேண்டும். 38% வரி போட்டும் கூட திருப்தியடையாத அமெரிக்காவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.


nagendhiran
மே 18, 2025 07:08

நம்ம ஆளுங்களுக்கு எல்லாம் இலவசமாகதான் வேண்டும்?


R. SUKUMAR CHEZHIAN
மே 18, 2025 04:23

டிரம்புக்கு முத்திபோவதற்கு முன் அமெரிக்கா வாழ் அனைத்து பாரத நாட்டவரும் மருத்துவர், விஞ்ஞானிகள் உட்பட அங்கிருந்து வெளியேறுவது உலக நன்மைக்கு நல்லது. அமெரிக்கவையும் சீனாவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் இருவரும் துரோகிகள்.


மீனவ நண்பன்
மே 18, 2025 06:11

அமெரிக்காவில் ஒரு சதவிகித இந்திய வம்சாவளியினரும் குடியுரிமை பெறாத இந்தியர்களும் செலுத்தும் வருமான வரி ஆறு சதவிகிதம். குடியேறிய பலநாட்டு வம்சாவளியினரை விட கல்லூரிகளில் படிக்கும் இந்திய வம்சாவளியினர் மிகவும் அதிகம். அமெரிக்காவில் பல முக்கிய பதவிகளிலும் கம்பெனிகளில் தலைமை பொறுப்பிலும் இந்திய வம்சாவளியினர் அதிகம். குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு. சீனாவை விட அதிக ஜனத்தொகை கொண்ட இந்தியா அவர்கள் அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொறாமை தேவை இல்லை


மீனவ நண்பன்
மே 18, 2025 03:50

இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்புகின்ற பணத்துக்கு 35 முதல் 45 சதவிகிதம் வருமானவரி கட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் நடக்கும் வெளிப்படையான பரிவர்த்தனை தான் இந்த 5 சதவிகித வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால் அரபு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் வரி விதிக்க ஆரம்பிப்பார்கள்


D.Ambujavalli
மே 18, 2025 03:40

பல மாணவர்கள் இங்கு கல்விக்கடன் போல எடுத்து அங்கு சென்று அடைப்பட்டுவிடுகிறார்கள். அதுபோல் இங்குள்ள பெற்றோர் மருத்துவம் , குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் தேவைக்கேற்ற தொகையை அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கும் வரி என்றால் இங்குள்ளவர்களுக்கு அனுப்புவதில் சுணக்கம் ஏற்படும் அவர்களுக்காக இங்கு கடன் வாங்கியவர்கள் தவிக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தாய் நாடு திரும்ப அங்குள்ள சொத்துக்கள், வாகனங்களை விற்று எடுத்துவர முயற்சிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இது மிகவும் கடினமாகும்.


சமீபத்திய செய்தி