மேலும் செய்திகள்
'காசாவை இஸ்ரேலுடன் இணைக்க மாட்டோம்'
08-Aug-2025
ஜெருசலேம் : காசாவை முழுமையாகக் கைப்பற்றும் பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கி சுமார் 1,200 பேரை க் கொன்று 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ் ரேல் போர் தொடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ixw811c1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தநிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கவும், அவர்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கவும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல கட்டங்களாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 பேர் வரை மட்டுமே ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் உட்பட காசாவை முழுமையாக கைப்பற்றும் முடிவுக்கு வந்தார். இதற்காக ராணுவ அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய பிரதமர் நெதன்யாகு, அந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரின், ஐந்து கொள்கை களுக்கு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
08-Aug-2025