உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளம் நாட்டில் ராணுவ ஆட்சி

நேபாளம் நாட்டில் ராணுவ ஆட்சி

காத்மாண்டு: நேபாளம் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றது.நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில், பிரதமர் வீடு சூறையாடப்பட்டது. நிலைமை கைமீறிப் போனதால் நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதி ராஜினாமா செய்தனர். இந்த கலவரத்தால் 19 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i4n7xbay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராணுவ ஆட்சி

இந்த கடினமான சூழ்நிலையில், உயிர்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் மேலும் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும் , ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரும் கலவரத்தால் நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரதமரை பதவி விலக வலியுறுத்திய நேபாளம் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்தல் , போராட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே பிரதமர் சர்மாஒலி, தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:27

ஒலி அங்கே போயி? பாகிஸ்தானிய ஊழல்வாதிகள் UK, USAA என்று செட்டில் ஆவார்கள், இந்த தலைவன் என்னவோ டுபாய் போறான்? ஒருவேளை தமிழ்ப்பட காமெடி நடிகர் அங்கே போயிட்டு வந்து கலர் டிரஸ் போட்டு அத்தர், சென்ட்டு அடிச்சுட்டு திரிவான் அதுபொன்றா ?


Ramesh Sargam
செப் 10, 2025 01:00

ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான முடிவுதான் இந்த கலவரத்துக்கு காரணம். காரணமான அந்த பிரதமர் இப்பொழுது உயிருக்கு பயந்து, மக்களை அம்போ என்று விட்டுவிட்டு வேறு நாட்டுக்கு தப்பிக்க பார்க்கிறார். அவர் எந்த நாட்டுக்கு தப்பிச்சென்றாலும், அவரை பிடித்து நேபால் கொண்டுவந்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அங்குள்ள மக்கள் அமைதியை கடைபிடிக்கவேண்டும். கலவரத்தால் ஒரு பயனும் இல்லை.


Ramesh Sargam
செப் 10, 2025 00:53

ஏழு போர்களை நிறுத்திய ட்ரம்ப், இந்த கலவரத்தை நிறுத்துவாரா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 07:16

கலவரத்தை தூண்டியதே கூட அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது நாடு பிடிக்கும் ஆசை கொண்ட பயங்கரவாதிகள் நிறைந்த மதத்தவராக கூட இருக்கலாம். இந்தியாவின் எல்லை புற நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்பும் ட்ரம்ப்பின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம்.


மணியன்
செப் 10, 2025 07:20

தூண்டியது ட்ரம்ப் குரூப்தான் பிறகு எப்படி நிறுத்த.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை