உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் யுரேனியத்திற்கு மட்டும் அனுமதி; அமெரிக்கா ஓரவஞ்சனை

ரஷ்யாவின் யுரேனியத்திற்கு மட்டும் அனுமதி; அமெரிக்கா ஓரவஞ்சனை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ய தடை விதித்துள்ள அமெரிக்கா, தங்களுக்கு யுரேனியம் தேவைப்படுவதால், அதற்கு மட்டும் தடை விதிக்க மறுத்துள்ளது.ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக 100 சதவீதம் வரை சுங்க வரி மற்றும் புதிய தடைகளை விதிக்கும் சட்ட மசோதா, அமெரிக்க பார்லியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 262 பேர் ஆதரவும், 159 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டாலும், அமெரிக்காவின் சொந்த அணுசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் சில குறிப்பிட்ட குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இறக்குமதிகளுக்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அணு உலைகளுக்குத் தேவையான செறிவூட்டல் சேவைகளில், ரஷ்யா சுமார் 26 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதால், உடனடியாக முழுமையான தடையை அமல்படுத்த முடியாத நிலை அமெரிக்காவுக்கு உள்ளது.அமெரிக்க பார்லியின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, தற்போது அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் விரைவில் இதில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthik
செப் 18, 2026 15:57

இப்போ யாரு உக்ரைன்- ரஷ்யா போரை ஊக்குவிப்பது. உன்னோட பெரும் அக்கப்போறுயா, டிரம்ப். உனக்கு வந்தா இரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி.


Chandradas Appavoo
செப் 18, 2026 14:14

உன்னை உடனேயே மெண்டல் ஹோச்பிடலில் சேர்க்கவேண்டும். ஏனெண்டால் நீ எப்போதும் வலதுசாரி எண்டே சொல்லே கொண்டெறிக்கின்டை.


N Srinivasan
செப் 18, 2026 13:47

இந்த செய்தியை படிக்கவே அசிங்கமாக இருக்கிறது....உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்று பல பெயர்களை வைத்து கொண்டு பண்ணுவது எல்லாம் திருட்டுத்தனம். அந்த நாட்டில் போய் நமது மக்கள் வேலை செய்து பணம் வாங்க வேண்டுமா என்றும் நினைக்க தோன்றுகிறது


அண்ணா
செப் 18, 2026 10:24

ஒரு வேளை சட்டத்தை திருத்தி மறுபடியும் அதிபராக டிரம்ப் வந்து விட்டால், எலான் மஸ்க்கிடம் கேட்டு விண்வெளிக்கு போய் விட வேண்டியது தான். வேறு வழியே கிடையாது


Kalyanaraman
செப் 18, 2026 09:02

ட்ரம்ப்பை இந்த தடைகளுக்காக பாராட்ட வேண்டும். தன் சுயலாபத்துக்காக மட்டுமே அன்றி உலக நலனுக்காக அல்ல என்பதை இந்த தடைகள் மூலம், அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளது. இதுவரை பொய்யாக அமெரிக்கா மீது இருந்த நல் மதிப்பு இப்போது பறந்து விட்டது. பணத்தையும் டெக்னாலஜியையும் வைத்து உலக நாடுகளை மிரட்டும் மிகக் கேவலமான ரவுடி என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டார் இந்த டிரம்ப்.


Haja Kuthubdeen
செப் 18, 2026 08:42

இதான் அமெரிக்கா...உலக போலீஸ்காரர்....இவனுங்களுக்கு ஜால்ரா அடிக்கும் வெள்ளைகார நாடுகள்..மற்றும் தீவிர வதுசாரி மத வெறியர்கள்.இவனுங்க மட்டும் அடுத்தநாட்டை அழிக்க மிரட்ட அனுஆயுதம் தயாரித்து ஸ்டாக் வச்சுக்குவானுங்களாம்.சிறியநாடுகளான இரான்..வட கொரியா எல்லாம்வச்சுகிட்டா உலக அமைதிக்கு பங்கமாம்.என்னங்கடா இது தர்மத்துக்கு வந்த சோதனை...


VENKATASUBRAMANIAN
செப் 18, 2026 07:55

பாவம் அமெரிக்கர்கள் கையில் பூமாலை கிடைத்தது போல் உள்ளனர். ரஷ்யா யுரேனியம் சப்ளையை நிறுத்த வேண்டும். எல்லா நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்


SUBBU,MADURAI
செப் 18, 2026 07:53

மார்ச் மாதம் பிரதமர் மார்க் கார்னியின் வருகையின் போது, ​​இந்தியாவும் கனடாவும் C$ 2.8 பில்லியன் மதிப்புள்ள 10 ஆண்டு யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இப்போது கோமாளி டிரம்ப் கனடாவையும் பகைத்துக் கொண்டதால், FTA ஒப்பந்தப்படி கனடாவின் கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி போன்ற இந்தியாவின் எரிசக்தி தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.


SUBBU,MADURAI
செப் 18, 2026 07:40

ஹிலாரி, அமெரிக்காவின் யுரேனியத்தில் 20% சதவீதத்தை ரஷ்ய அதிபர் புடினுக்குக் கொடுத்தார். புடின், அதற்கு பதிலாக கிளிண்டன் அறக்கட்டளைக்கு 145 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்தார். பில் கிளிண்டனை மாஸ்கோவிற்கு வரவழைத்து அவர் அங்கு 30 நிமிடங்கள் பேசியதற்காக ரஷ்ய அதிபர் புதின் மேலும் அவருக்கு 5,00,000 லட்சம் டாலர்களை கொடுத்தார். ஒபாமா, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனிக்கு 150 பில்லியன் டாலர்களைப் பணமாகக் கொடுத்தார். ஈரான் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை வாங்கியது. புடின், ஈரானுக்கு (அயதுல்லா கமேனிக்கு) யுரேனியத்தை விற்றார்.கடைசியில் ஈரான், ஹிலாரியின் யுரேனியத்தை அணு குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. இதையெல்லாம் கேட்டு அவர்கள் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரிக்கவில்லை. அதன் பிறகு, பலமுறை கூட்டாட்சி நீதிமன்ற அழைப்பாணைகள் வழங்கப்பட்ட பின்னரும், ஹிலாரி 33,000 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை நீக்கியதாவது இந்த கோமாளி டிரம்பிற்கு தெரியுமா?


chinnamanibalan
செப் 18, 2026 07:24

பெரிய அண்ணன் மனப்பான்மையில், ஊருக்கு மட்டுமே உபதேசம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை