உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மர் எல்லையில் இருந்து இந்தியர்கள் 283 பேர் மீட்பு

மியான்மர் எல்லையில் இருந்து இந்தியர்கள் 283 பேர் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைப்பியிதோ: தாய்லாந்து- மியான்மர் எல்லையில் 2 வாரங்களாக சிக்கித் தவித்த இந்தியர்கள் 283 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, தகவல்களை சரிவர விசாரிக்காமல் வெளிநாடு செல்வோர், குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி பலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களிடம் சிக்கி உள்ளனர். அவர்களை அவ்வப்போது மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாய்லாந்து- மியான்மர் எல்லையில் 2 வாரங்களாக சிக்கித் தவித்த 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று சைபர் கிரைம் மோசடியில் மர்ம கும்பல் ஈடுபட செய்துள்ளது.இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மியான்மரில் போலி வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 283 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இருக்கிறது. அவர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sudha
மார் 11, 2025 13:23

பாதி சம்பளம் கொடுத்து 100 நாள் வேலை வாய்ப்பு குடுக்கணும், இல்லன்னா வெளிநாடு போகாதே என்ற போஸ்டர் ஒட்டும் வேலை தரலாம்


Pandi Muni
மார் 11, 2025 10:52

அந்நிய நாட்டு குடியேறிகளை வெளியேற்றினாலே நம் நாட்டவர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


வாய்மையே வெல்லும்
மார் 11, 2025 16:22

குல்லா போட்ட போதும் எந்த எதிரிநாட்டில் இருந்தாலும் இவர்கள் இந்தியா வரலாம் வந்து பொய் வாக்குறுதி இட்டு இந்திய பிரஜை ஆகலாம் என்பது தான் இந்த மூடர்களின் பக்கவாதம் . பாசம் இருக்கலாம் அதுக்காக அந்நியன் இந்தநாட்டில் உள்ளே அனுமதிப்பது அக்கிரமம் . அதை முழுநேர வேலையாகவே சிலர் செய்கிறார்கள் என்பது சாம்பிராணி ஆட்களுக்கு நல்லாவே தெரியும் . அதை என்னமோ புனித தன்மையோடு பார்ப்பது நாட்டில் நடக்கும் கேலிக்கூத்து ..


RK
மார் 11, 2025 09:48

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு நடக்கும் குற்றம் மற்றும் விபத்து சம்பவங்கள் இந்திய ஊடகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை மக்களுக்கு தெரியப்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். முதலில் மக்கள் தொகை கட்டுப்படுத்த வேண்டும். இலவசங்கள் நிறுத்த வேண்டும்.


முக்கிய வீடியோ