உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடனான உறவு சுதந்திரமானது: பாக்.,கிற்கு ஆப்கன் பதிலடி

இந்தியா உடனான உறவு சுதந்திரமானது: பாக்.,கிற்கு ஆப்கன் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இந்தியாவை தொடர்புபடுத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஒரு சில நாட்கள் நடந்த மோதல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஆப்கன் - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ech8jlte&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், '' இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,'' எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மற்ற நாடுகள் மீது சுமத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் கூறுகையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்களின் பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எங்கள் கொள்கை ஆதரிக்காது. ஆப்கன், சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியாஉடன் உறவை பராமரிக்கிறோம். எங்கள்நாட்டின் நலன் அடிப்படையில் உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

cpv s
அக் 22, 2025 12:39

india must thing before helping to other muslim country towice, india helped turkey during earthquick , then turkey send weabon to pakistan to fight india, then why want help muslim nation like this our people tax money going to wastle or kill our people


Anand
அக் 22, 2025 11:57

நீங்கள் கூறுவது சரியாக புரியவில்லை


cpv s
அக் 22, 2025 11:32

pakistan never get silent unless otherwise pakistan must be divided into four country


அப்பாவி
அக் 22, 2025 09:30

இவிங்க மூர்க்கம் வேறே. அவிங்க மூர்க்கம் வேறே.


S.V.Srinivasan
அக் 22, 2025 09:30

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போர் சவுதி அரேபியா நாடுகளின் தலையீட்டால் முடிவுக்கு வந்ததுன்னு செய்தி போட்டுருக்கீங்க. டிரம்ப் கோவிச்சுக்கப்போறாரு. அவரு ஏற்கனவே நோபல் பரிசு வாங்க தலைகீழா நின்னுக்கிட்டு இருக்காரு.


நிக்கோல்தாம்சன்
அக் 22, 2025 08:59

எவ்வளவு தெளிவா பேசுறாங்க ஆப்கான், இதுநாள் வரை பாகிஸ்தான் மற்றைய நாடுகளின் பொதுமக்கள் மீது தான் தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகிறது , குஜராத்தி சம்பவம், மும்பை சம்பவம் , பெஹல்கம் சம்பவம் , காஸ்மீர், பலோச் சம்பவம் இன்று ஆப்கன் என்று எல்லாவற்றிலும் பொதுமக்களே கொல்லப் படுகிறார்கள், தமிழக வெளிநாட்டு மத ஆர்வலர்களே நீங்க உங்களின் தாய்நாடான பாகிஸ்தானிடம் சொல்லுங்களேன், இதுநாள் வரை ஆப்கன் தாக்கியது ஒரு பொதுமக்களும் அடிபடவில்லை, இந்திய தாக்கியதில் அவ்வாறு ஆகவில்லை


Sun
அக் 22, 2025 08:17

பாகிஸ்தான் பங்களாதேஷை தன் பக்கம் வளைத்து இந்தியாவை தாக்க முயன்றது! ஆனால் முந்திக் கொண்ட இந்தியா ஆப்கானிஸ்தானை தன் பக்கம் வளைத்து பாகிஸ்தானை ஆப்கன் மூலம் தாக்கி பாகிஸ்தானுக்கு பயத்தை உண்டாக்கி விட்டது.


ramani
அக் 22, 2025 06:15

பலுசிஸ்தான் மக்களும் பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து போராடவேண்டும்


Senthoora
அக் 22, 2025 05:45

எதிரிக்கு எதிரி நண்பன். இதெல்லாம் டிரம்ப் நடத்தும் சதுரங்க ஆட்டம்.


Kasimani Baskaran
அக் 22, 2025 04:03

ஆப்கானியர்கள் பாக்கிஸ்தான் இராணுவத்தை தாக்குகிறார்கள். ஆனால் பாக்கிகள் ஆப்கான் பொது மக்களை தாக்குகிறார்கள். ஆக பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகள் போல செயல்படுகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 22, 2025 06:27

எப்படி இருந்த நீர் இப்படி ஆயிட்டேள், தாலிபானுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நெலைமையா?


vivek
அக் 22, 2025 07:42

உள்ளூர் இருநூறு கொத்தடிமை தலிபான் பத்தி பேசுதுகள்....இதுக்கு இருநூறு வருமா


Anand
அக் 22, 2025 10:39

ஒரு பக்கா பக்கி போல பேசுகிறார்.


N Sasikumar Yadhav
அக் 22, 2025 11:27

பாலைவன நாடுகளில் இரண்டு பாலைவன மதங்களும் அடித்து கொள்கிறார்கள் ஆனால் இந்துக்களை அழிக்க திராவிட மாடல் கட்சியுடன் சேர்ந்து இரண்டு பாலைவன மதத்தான்களும் ஒன்றுசேர வில்லையா அதுபோலதான்.