உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா

ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக நடந்த 5 வது டெஸ்டில் 6 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு 374 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. அதை தொடர்ந்து 2 வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடத்துவங்கியது.துவக்க ஆட்டக்காரர்களான, க்ராவ்லே 14 ரன்களுக்கு சிராஜ் பந்தில் வெளியேறினார்.சிறப்பாக விளையாடிய, பென் டக்கெட், அரைசதம் கடந்து 54 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆனார்.அதை தொடர்ந்து போப் சிராஜ் பந்தில் அவுட்டாகி 27 ரன்களுக்கு வெளியேறினார்.ஜோ ரூட், ஹேரி புரூக் சதம்: அடுத்துவந்த ஜோ ரூட், ஹேரி புரூக் இருவரும் நிலைத்து நின்று விளையாடி இந்திய பந்துவீச்சை சமாளித்து பவுண்டரிகளாக விளாசினர். அபாரமாக ஆடிய புரூக் 111, டெஸ்டில் தனது 10வது சதம் அடித்தார். இத்தொடரில் இவரது இரண்டாவது சதம். ஆகாஷ் தீப் பந்தில் 2 ரன் எடுத்த ரூட், டெஸ்ட் அரங்கில் 39வது சதம் எட்டினார். பெத்தல் (5) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணா பந்தில் ரூட் 105 ரன்னில் அவுட்டாக 'டென்ஷன்' ஏற்பட்டது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜேமி ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தார்.இந்நிலையில் 5வது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் பந்துவீச்சில் அபாரமாக பந்துவீச,இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இங்கிலாந்து அணி, 367 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.இந்திய தரப்பில் சிராஜ், 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

suresh Sridharan
ஆக 05, 2025 08:46

ராணுவத்தையும் இந்தியர்களையும் இழிவு படுத்தும் வேலை பல ஆண்டுகளாக இந்த ராகுல் செய்கிறார் அவருக்கு ஹிந்துக்களை சுத்தமாக பிடிக்காது அவருடைய பாட்டி இந்திரா இருந்த பொழுது இவரும் இவர் தந்தையும் என்ன செய்தார்கள் கல்மா ஓதுகிறார்கள் ஆனாலும் இவர்களை இந்துக்கள் தான் என்று நம் நாடு நம்புகிறது


K.V.K.SRIRAM
ஆக 05, 2025 06:14

Well played Team India....retaining nerve, with odds staked against, they achieved this victory. This young team will take Indian cricket to greater heights. Keep it up


Somasundaramramasamy
ஆக 04, 2025 22:54

இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. மிகவும் சிறப்பு வாய்ந்த வெற்றியாகும். ஓவல் மைதானம் மிகவும் சவால் நிறைந்தது. கிரிக்கெட் ஜாம்பவான்களின் அதிரடி தாக்குதலை சமாளித்து இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மிக முழு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய இளம் கிரிக்கெட் படையின் கூட்டு முயற்சி மிகவும் வியக்கத்தக்கது. அடுத்து வரும் டெஸ்டுகளில் ஜெயிப்பதற்கு இது மிகவும் தேவையான அச்சாரம் ஆகும். அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்


Ramesh Sargam
ஆக 04, 2025 19:44

வாழ்த்துக்கள்.


V.Mohan
ஆக 04, 2025 19:27

கருத்து வாந்தி எடுக்கும் சம்பள விடியல் வீரர்களே, டெஸ்ட் மேட்ச் கிரிக்கட் எந்த அளவு கடினமான சூழலில் விளையாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சும்மா உங்க ஊரில் கிரிக்கட் விளையாட்டு என்ற பெயரில் ரப்பர் பந்தில் விளையாடுகிறார்களே அது போலன்னு நினைச்சீங்களா?. சரியான முறையில் ஓடி, 142 கி.மீ வேகத்தில் பந்து வீசும். முகமது சிராஜ் என்ற நபரின் ஈடுபாடு பற்றி தெரியுமா? உயிரைக் கொடுத்து பெளலிங். போடும் ப்ரசீத் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ்தீப் போன்ற வேகப்பர்து வீச்சாளர்கள் தொடர்ந்து 20/30 ஓவர்கள் வீசுவது எவ்ளவு சிரமம்? பணம் கிடைக்கிறதே என்று குறுக்குச்சால் போட முயலவேண்டாம். சிராஜ் போன்றவர்கள் சமூகத்தின் மிக மிக அடித்தட்டில் இருந்து தங்களது ஈடுபாட்டால் இந்தளவு. உயர்ந்துள்ளனர். தோற்றுவிடும் நிலையில் மனம் தளராமல் ஒன்று சேர்ந்து வெற்றியை பறித்துள்ளனர். இன்னும் 6 ரன் எடுத்திருந்தால் இங்கிலாந்து வெற்றி அடைந்திருக்கும். டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் சமன் செய்வது மிகப் பெரிய சாதனை


ரங்ஸ்
ஆக 04, 2025 18:42

இளம் வீரர்கள், இளம் அணித்தலைவர். சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தியுள்ளனர். சிறிது அதிர்ஷ்டம் இருந்திருந்தால் தொடர் வெல்லும் வாய்ப்பு இருந்திருக்கும்.


Sundar R
ஆக 04, 2025 17:50

What is the use of a world no 1 bowler who cannot bowl for 5 s and boasting of no 1 status? He is not playing only to retain his number 1 status. Siraj should be recognised for his yeoman service to the nation in this series. No-1 in paper wont win matches.


muhamad abdulla
ஆக 04, 2025 17:07

ஆமா ரொம்ப முக்கிய விஷயம்


Kumar Kumzi
ஆக 04, 2025 17:43

ஆமா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு முக்கியம் இல்ல தான்


தஞ்சை மன்னர்
ஆக 04, 2025 16:59

நாட்டிற்கு தேவை இல்லாத ஆணிகள்


Kumar Kumzi
ஆக 04, 2025 17:44

ரோஹிங்கியா மன்னனுக்கு பாக்கிஸ்தான் ஆணி தானே புடிக்கும்


Columbus
ஆக 04, 2025 16:58

It is truly a miracle that India pulled off a thrilling win in ihe Oval Test. Usually, in such close matches, we end up on the losing side. But not this time. Superb end to this exciting series.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை